கருமத்தம்பட்டி அருகே கல்லூரி மாணவியை கடத்த முயன்ற இரு இளைஞர்கள் கைது

கோவை : கருமத்தம்பட்டி அருகே உள்ள தனியார் கல்லூரி வளாகத்தின் வெளிப்புறத்தில் நின்று கொண்டிருந்த மாணவியை காதல் விவகாரத்தில் கடத்த முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : கருமத்தம்பட்டி அருகே உள்ள தனியார் கல்லூரி வளாகத்தின் வெளிப்புறத்தில் நின்று கொண்டிருந்த மாணவியை காதல் விவகாரத்தில் கடத்த முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் காலேஜ் சாலையை சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் கருமத்தம்பட்டி அருகே உள்ள தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து வருகிறார். இதில், ரஞ்சித் என்ற ரஞ்சித் குமாரும் (25) மாணவியும் காதலித்து வந்ததாகவும், திடீரென ரஞ்சித்குமாரின் காதலுக்கு அவர் மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று மாணவி கல்லூரிக்கு வந்து வளாகம் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென காரில் வந்த ரஞ்சித்குமாரும் அவரது நண்பர் அப்துல் ரகுமானும் மாணவியை காரில் ஏறும்படி வற்புறுத்தியுள்ளனர். ஆனால், மாணவி காருக்குள் ஏற மறுப்பு தெரிவித்ததால், அவர்கள் இருவரும் வலுக்கட்டாயமாக காரில் ஏற்ற முயற்சி செய்தனர். இதையடுத்து, மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த மாணவர்கள் அந்த இளைஞர்களிடம் இருந்து மாணவியை மீட்டனர். பின்னர், சுதாரித்துக் கொண்ட காரில் வந்த இளைஞர்கள் தப்பியோடினர். இதைத்தொடர்ந்து, மாணவியின் தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் கருமத்தம்பட்டி போலீசார் இளைஞர்கள் இருவரையும் கைது செய்து 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 

கல்லூரி வளாகத்தின் முன் காதல் விவகாரத்தில் மாணவியை காரில் ஏற்றி கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...