கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அரசு அடையாள ஸ்டிக்கரை ஒட்டி, அரசு அதிகாரி போல் ஆட்டோ ஓட்டுநரை மிரட்டிய வாடகைக் கார் ஓட்டுநரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அரசு அடையாள ஸ்டிக்கரை ஒட்டி, அரசு அதிகாரி போல் ஆட்டோ ஓட்டுநரை மிரட்டிய வாடகைக் கார் ஓட்டுநரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
கோவையில் உள்ள பல்வேறு பகுதிகளில் போலீஸ், தமிழ்நாடு அரசு, பிரஸ், அட்வகேட் என பல அடையாளங்களை போலியாக தயாரித்து ஒட்டி வாகனங்களை இயக்கி வருகின்றனர். இது தொடர்பாக பலமுறை புகார்கள் எழுந்தன. அதேபோல, சமூகவிரோதிகள் சிலர் இதுபோன்ற அடையாளங்களை வாகனங்களில் ஒட்டிக்கொண்டு சட்டவிரோத செயல்களை எளிமையாக செய்கின்றனர்.

இந்த நிலையில், நஞ்சுண்டாபுரம் பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர் அரசு அலுவலர்களுக்கு வாடகை வண்டி ஓட்டி வருகிறார். இவர் அரசுப் பணியின் போது தற்காலிக ஸ்டிக்கர்களை ஒட்டுவதற்கு பதிலாக நிரந்தரமாக ஒட்டி தனது காரை இயக்கி வந்தார். இந்த சூழலில், இவர் இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரும் போது முன்னே சென்ற ஆட்டோ ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, காரில் ஒட்டப்பட்ட தமிழ்நாடு அரசு என்ற எழுத்தைக் காண்பித்து மிரட்டியுள்ளார்.
பின்னர், தகவலறிந்து வந்த போலீசார், விசாரணை செய்து தற்காலிக வாகனத்தில் நிரந்தர ஸ்டிக்கரை ஒட்டியது தவறு என எச்சரித்து ஸ்டிக்கரை அகற்றும்படி தெரிவித்தனர். இந்த சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவையில் உள்ள பல்வேறு பகுதிகளில் போலீஸ், தமிழ்நாடு அரசு, பிரஸ், அட்வகேட் என பல அடையாளங்களை போலியாக தயாரித்து ஒட்டி வாகனங்களை இயக்கி வருகின்றனர். இது தொடர்பாக பலமுறை புகார்கள் எழுந்தன. அதேபோல, சமூகவிரோதிகள் சிலர் இதுபோன்ற அடையாளங்களை வாகனங்களில் ஒட்டிக்கொண்டு சட்டவிரோத செயல்களை எளிமையாக செய்கின்றனர்.

இந்த நிலையில், நஞ்சுண்டாபுரம் பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர் அரசு அலுவலர்களுக்கு வாடகை வண்டி ஓட்டி வருகிறார். இவர் அரசுப் பணியின் போது தற்காலிக ஸ்டிக்கர்களை ஒட்டுவதற்கு பதிலாக நிரந்தரமாக ஒட்டி தனது காரை இயக்கி வந்தார். இந்த சூழலில், இவர் இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரும் போது முன்னே சென்ற ஆட்டோ ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, காரில் ஒட்டப்பட்ட தமிழ்நாடு அரசு என்ற எழுத்தைக் காண்பித்து மிரட்டியுள்ளார்.
பின்னர், தகவலறிந்து வந்த போலீசார், விசாரணை செய்து தற்காலிக வாகனத்தில் நிரந்தர ஸ்டிக்கரை ஒட்டியது தவறு என எச்சரித்து ஸ்டிக்கரை அகற்றும்படி தெரிவித்தனர். இந்த சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பரபரப்பை ஏற்படுத்தியது.