திருப்பூர் : பிளாஸ்டிக் தடை விவகாரத்தில் தமிழக வியாபாரிகளை அதிகாரிகள் அச்சுறுத்துவதை நிறுத்த வேண்டும் என திருப்பூரில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்ரமராஜா தெரிவித்துள்ளார்.
திருப்பூர் : பிளாஸ்டிக் தடை விவகாரத்தில் தமிழக வியாபாரிகளை அதிகாரிகள் அச்சுறுத்துவதை நிறுத்த வேண்டும் என திருப்பூரில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்ரமராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கூட்டமைப்பின் சார்பில் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மாநில தலைவர் விக்ரமராஜா தலைமையில் திருப்பூரில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.

அப்போது, செய்தியாளர்களிடம் விக்ரமராஜா பேசியதாவது :- பிளாஸ்டிக் தடை விவகாரத்தில் தமிழக வியாபாரிகளை அதிகாரிகள் அச்சுறுத்துவதை நிறுத்த வேண்டும். மாநில அரசு பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்றுப்பொருள் அறிமுகப்படுத்தியபின் வியாபாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்கள் பிளாஸ்டிக் பையில் வழங்கப்பட்டு வருகிறது. அதனை மாநில அரசு கண்டுகொள்வதில்லை.
ஜி.எஸ்.டி. எளிய நடைமுறைக்கு கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர். ஆனால், அதில் தெளிவான விளக்கம் இல்லை. அதனால், மத்திய அமைச்சரை சந்தித்து முறையிடவுள்ளோம். வாடகை கட்டிடத்திற்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்களிக்க வேண்டும். பெரும்பாலான வணிக நிறுவனங்கள் வாடகை கட்டிடத்திலேயே செயல்படுகிறது. வெளிநாடு நிறுவனங்கள் கடை திறப்பதற்கு முயற்சி நடைபெறுகிறது. உள்நாட்டு வணிகத்தை காப்பதற்கு அரசு நடவடிக்கை வேண்டும், என்று கூறினார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கூட்டமைப்பின் சார்பில் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மாநில தலைவர் விக்ரமராஜா தலைமையில் திருப்பூரில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.

அப்போது, செய்தியாளர்களிடம் விக்ரமராஜா பேசியதாவது :- பிளாஸ்டிக் தடை விவகாரத்தில் தமிழக வியாபாரிகளை அதிகாரிகள் அச்சுறுத்துவதை நிறுத்த வேண்டும். மாநில அரசு பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்றுப்பொருள் அறிமுகப்படுத்தியபின் வியாபாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்கள் பிளாஸ்டிக் பையில் வழங்கப்பட்டு வருகிறது. அதனை மாநில அரசு கண்டுகொள்வதில்லை.
ஜி.எஸ்.டி. எளிய நடைமுறைக்கு கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர். ஆனால், அதில் தெளிவான விளக்கம் இல்லை. அதனால், மத்திய அமைச்சரை சந்தித்து முறையிடவுள்ளோம். வாடகை கட்டிடத்திற்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்களிக்க வேண்டும். பெரும்பாலான வணிக நிறுவனங்கள் வாடகை கட்டிடத்திலேயே செயல்படுகிறது. வெளிநாடு நிறுவனங்கள் கடை திறப்பதற்கு முயற்சி நடைபெறுகிறது. உள்நாட்டு வணிகத்தை காப்பதற்கு அரசு நடவடிக்கை வேண்டும், என்று கூறினார்.