டெல்லி : தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளை நீக்குவதற்காக நாடாளுமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் மத்திய அரசுடன் பேசி நடவடிக்கை எடுக்க உதவ வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
டெல்லி : தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளை நீக்குவதற்காக நாடாளுமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் மத்திய அரசுடன் பேசி நடவடிக்கை எடுக்க உதவ வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் சுந்தரம், உத்தரமேரூர் தொகுதியில் உள்ள சில சுங்கச் சாவடிகள் அதற்கான காலம் முடிந்த பிறகும் மக்களிடம் பணம் வசூலித்து வருவதாகவும், அவற்றை அகற்ற உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உங்கள் கட்சியைச் சேர்ந்தவர் மத்திய அமைச்சராக இருந்த போது தான் சுங்கச்சாவடி வந்தது. தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிகமானவர்கள் இருக்கிறோம் என பெருமையாக சொல்கிறீர்கள், தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற நாடாளுமன்றத்தில் அவர்கள் பேசி உதவ வேண்டும், என்றும் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் சுந்தரம், உத்தரமேரூர் தொகுதியில் உள்ள சில சுங்கச் சாவடிகள் அதற்கான காலம் முடிந்த பிறகும் மக்களிடம் பணம் வசூலித்து வருவதாகவும், அவற்றை அகற்ற உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உங்கள் கட்சியைச் சேர்ந்தவர் மத்திய அமைச்சராக இருந்த போது தான் சுங்கச்சாவடி வந்தது. தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிகமானவர்கள் இருக்கிறோம் என பெருமையாக சொல்கிறீர்கள், தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற நாடாளுமன்றத்தில் அவர்கள் பேசி உதவ வேண்டும், என்றும் தெரிவித்தார்.