கோவை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட 100க்கும் மேற்பட்டோர் கைது

கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கள்ளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்டோர் சமூகத்தை சேர்ந்த மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கள்ளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்டோர் சமூகத்தை சேர்ந்த மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். 



கள்ளிப்பாளையம் மக்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய நபர்கள் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரியும், தாக்குதலில் பாதிக்கப்பட்ட இருவருக்கு உயர்சிகிச்சை வழங்கிடவும், அப்பாவி மக்கள் 50 பேர் மீது போடப்பட்ட வழக்கைத் திரும்பப் பெறக்கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் தமிழ்புலிகள் கட்சியைச் சேர்ந்தவர்களும் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்ல வலியுறுத்தினர். 



ஆனால், அதனையும் மீறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட அனைவரையும் கைது செய்து பேருந்தில் ஏற்றி தனியார் மண்டபத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்நிகழ்வால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

கடந்த 10-ம் தேதி இரவு கள்ளிப்பாளையம் பகுதியில் இருதரப்பினருக்கு ஏற்பட்ட மோதலில் போலீசார் 3 பேர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டம் உள்பட மூன்று வழக்காகப் பதிவு செய்தனர். இதில், தாழ்த்தப்பட்டோர் மக்கள் 50 பேர் மீதும், மற்றொரு தரப்பு இருவர் மீது மட்டுமே வழக்குப் பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...