கோவை கரும்புக்கடையில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மனு

கோவை : கரும்புக்கடையில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட மற்றும் மாநகர நிர்வாகத்திடம் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பினர் மனு அளித்துள்ளனர்.

கோவை : கரும்புக்கடையில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட மற்றும் மாநகர நிர்வாகத்திடம் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பினர் மனு அளித்துள்ளனர். 



இது தொடர்பாக அவர்கள் அளித்துள்ள மனுவில் குறிப்பிட்டிருப்பதாவது :- கோவை மாநகரின் கரும்புக்கடை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். பல்வேறு அடிப்படை தேவைகளுக்காக இவர்கள் நீண்ட தூரம் செல்ல வேண்டி உள்ளது. எனவே, இங்குள்ள தொடக்கப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் அல்லது புதிய மேல்நிலை பள்ளியினை உக்கடம் கழிவுநீர்ப் பண்ணை அருகே இருக்கும் அரசு நிலத்தில் கட்டிடவேண்டும், வங்கி கிளை அமைத்திட வேண்டும், நூலகம் மற்றும் e-நூலகம் அமைத்திட வேண்டும், சிறுவர் விளையாட்டுப் பூங்கா அமைத்திட வேண்டும், ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பிரசவ நிலையம் அமைத்திட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 

மேலும், கரும்புக்கடை பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரிசலை சீர்செய்திட வேண்டும், நொய்யல் ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும், மாசுபடுவதை தடுத்திட வேண்டும், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பாட்ட சிறுவர்களுக்கான காப்பகம் அமைத்திட வேண்டும், அரசு மருத்துவமனையில் அமரர் ஊர்திகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், இயன்றவர்களுக்கு அவர்களே சடலங்களை எடுத்துச்செல்ல அனுமத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் முன்பு வைக்கப்பட்டது. 



இதேபோல, மேற்கண்ட கோரிக்கைகள் அடங்கிய மனு கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக பதவியேற்றுள்ள ஷ்ரவன் குமாரிடமும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை பெருநகரக் கிளை சார்பில் நேற்று அளிக்கப்பட்டது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...