கோவை - பெங்களூர் இரவு நேர ரயில் சேவை வழங்க வேண்டும் : மக்களவையில் கோவை எம்.பி.க்கள் வலியுறுத்தல்

12 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்ட்ட கோவை - பெங்களூரூ இரவு நேர ரயில் சேவையை நிறைவேற்ற வேண்டும் என மக்களவையில் கோவை எம்.பி.க்கள் வலியுறுத்திறுத்தினர்.

12 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்ட்ட கோவை - பெங்களூரூ இரவு நேர ரயில் சேவையை நிறைவேற்ற வேண்டும் என மக்களவையில் கோவை எம்.பி.க்கள் வலியுறுத்திறுத்தினர்.

கோவையில் இருந்து பெங்களூருக்கு இரவு நேர ரயில்சேவை வழங்கிட வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி மக்களவையில் பி.ஆர்.நடராஜன் மற்றும் சண்முக சுந்தரம் எம்பிக்கள் உரையாற்றியுள்ளனர். இது குறித்து நேற்று நடைபெற்ற ரயில்வே மானிய கோரிக்கையின் மீது மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ஆற்றிய உரையில், பொள்ளாச்சி - கோவை இடையிலான அகல ரயில் பாதை துவங்கப்பட்டு, 8 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. பணிகள் துவங்குவதற்கு முன்பு கோவை - ராமேஸ்வரம், கோவை - கொல்லம்,கோவை - மதுரை போன்ற வழித்தடங்களில் இயங்கி வந்த ரயில்கள் நீண்ட கோரிக்கைக்கு பின்பு மீண்டும் துவங்கப்படாமல் உள்ளது. இந்த வழித்தடங்களில் முன்பு இயக்கப்பட்ட அனைத்து ரயில்களையும் உடனடியாக இயக்கிட வேண்டும். மேலும், கோவை - பெங்களூர் இடையிலான இரவு நேர ரயில் இயக்கப்படும் என 12 ஆண்டுகளுக்கு முன்பு 2007ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையில் அன்றைய ரயில்வே துறை அமைச்சர் அறிவிப்பு செய்தார். இந்த அறிவிப்பு இன்று வரை நிறைவேற்றப்படாமல் இருப்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன், என்றார். கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜனுடன் இணைந்து பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரமும் இதனை வலியுறுத்தினார். 

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...