குன்னூரில் தேயிலை தோட்டத்தில் முகாமிட்ட காட்டெருமைகள் : தேயிலை தொழிலாளர்கள் பீதி

நீலகிரி : குன்னூரில் உள்ள தேயிலை தோட்டத்தில் உலா வரும் காட்டெருமைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி : குன்னூரில் உள்ள தேயிலை தோட்டத்தில் உலா வரும் காட்டெருமைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேயிலைத் தோட்டங்கள் நிறைந்து காணப்படுகின்றன குறிப்பாக, ரூத் பகுதியில் தனியார் எஸ்டேட் நிறைந்துள்ளன வனத்தை ஒட்டி அமைந்துள்ள தேயிலைத் தோட்டங்களில் காட்டெருமை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில், நேற்று காலை ப்ரூக் எஸ்டேட் பகுதியில் 25-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் குட்டிகளுடன் கூட்டமாக தேயிலை தோட்டத்தில் உலா வந்தன இதனால், தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள் அச்சத்துடன் பணியை நிறுத்தி விட்டு வெளியேறினர். நீண்ட நேரம் காத்திருந்த தொழிலாளர்கள் காட்டெருமைகள் தேயிலை தோட்டத்தை விட்டு வெளியேறிய பின்பு பணிகளை மேற்கொண்டனர். எனவே, அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு இப்பகுதியில் சுற்றித்திரியும் காட்டெருமைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...