கோவை : ஜி.எஸ்.டி. செலுத்துவதில் சுமார் 2.80 லட்சம் மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கோவை : ஜி.எஸ்.டி. செலுத்துவதில் சுமார் 2.80 லட்சம் மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கோவை சரவணம்பட்டியைச் சேர்ந்த சகோதரர்கள் பி.ராஜமாணிக்கம் மற்றும் சுப்ரமணியம் ஆகியோர் ஸ்ரீ மதுரா டிரேடர்ஸ் என்ற ஐரான் ஸ்கேரப் தொழில் நடத்தி வருகிறார். இவர்களிடம் வேலை செய்த ராசுப்பிள்ளை என்பவரது மகன் பாலசுப்ரமணியம் என்பவர் இவர்களின் கணக்கு வழக்குகளைப் பார்த்து வந்தார். மேலும், பாலசுப்ரமணியம் அவர் தனியாக ஐரான் கம்பெனியை நடத்தி வந்த நிலையில், 15 வருடங்களுக்கு மேலாக நம்பிக்கைக்குரியவர் என்ற காரணத்தால் ஜி.எஸ்.டி. துறையிடம் கணக்கு வழக்குகளை சமர்பித்து பராமரித்து வந்தார்.
இந்த நிலையில், ராஜமாணிக்கத்தின் ஜி.எஸ்.டி மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி சகோதரர்களுக்கு தெரியாமல் வேறு நபர்களிடம் வியாபாரம் செய்து ரூ. 2,81,70,000 இழப்பு ஏற்படுத்தி நம்பிக்கை மோசடி செய்ததாக ராஜமாணிக்கம் கோவை மாநகர குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். அதன் பேரில், கோவை மாநகர குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரணின் உத்தரவுப்படி, காவல் துணை ஆணையர் பெருமாள் மேற்பார்வையில், உதவி ஆணையர் சந்திரசேகரனின் தலைமையில், காவல் ஆய்வாளர் நாகராஜன், உதவி ஆய்வாளர் ஜமுனா மற்றும் போலீஸார் நேற்று கோவை கொண்டையம் பாளையத்தில் வசித்து வரும் ஆர். பாலகப்ரமணி என்பவரை கைது செய்து நீதிமன்றக்காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கோவை சரவணம்பட்டியைச் சேர்ந்த சகோதரர்கள் பி.ராஜமாணிக்கம் மற்றும் சுப்ரமணியம் ஆகியோர் ஸ்ரீ மதுரா டிரேடர்ஸ் என்ற ஐரான் ஸ்கேரப் தொழில் நடத்தி வருகிறார். இவர்களிடம் வேலை செய்த ராசுப்பிள்ளை என்பவரது மகன் பாலசுப்ரமணியம் என்பவர் இவர்களின் கணக்கு வழக்குகளைப் பார்த்து வந்தார். மேலும், பாலசுப்ரமணியம் அவர் தனியாக ஐரான் கம்பெனியை நடத்தி வந்த நிலையில், 15 வருடங்களுக்கு மேலாக நம்பிக்கைக்குரியவர் என்ற காரணத்தால் ஜி.எஸ்.டி. துறையிடம் கணக்கு வழக்குகளை சமர்பித்து பராமரித்து வந்தார்.
இந்த நிலையில், ராஜமாணிக்கத்தின் ஜி.எஸ்.டி மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி சகோதரர்களுக்கு தெரியாமல் வேறு நபர்களிடம் வியாபாரம் செய்து ரூ. 2,81,70,000 இழப்பு ஏற்படுத்தி நம்பிக்கை மோசடி செய்ததாக ராஜமாணிக்கம் கோவை மாநகர குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். அதன் பேரில், கோவை மாநகர குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரணின் உத்தரவுப்படி, காவல் துணை ஆணையர் பெருமாள் மேற்பார்வையில், உதவி ஆணையர் சந்திரசேகரனின் தலைமையில், காவல் ஆய்வாளர் நாகராஜன், உதவி ஆய்வாளர் ஜமுனா மற்றும் போலீஸார் நேற்று கோவை கொண்டையம் பாளையத்தில் வசித்து வரும் ஆர். பாலகப்ரமணி என்பவரை கைது செய்து நீதிமன்றக்காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.