கோவை : போக்குவரத்திற்கு இடையூறாக வீதியின் நடுவில் இருக்கும் கோவிலை அகற்றக் கோரி குடியிருப்புவாசிகள் கோவை மாநகராட்சியில் மனு அளித்தனர்.
கோவை : போக்குவரத்திற்கு இடையூறாக வீதியின் நடுவில் இருக்கும் கோவிலை அகற்றக் கோரி குடியிருப்புவாசிகள் கோவை மாநகராட்சியில் மனு அளித்தனர்.
கோவை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. அதில், வார்டு எண்.42-க்குட்பட்ட சின்னவேடம்பட்டியில் உள்ள பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்த பொதுமக்கள் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில், பிள்ளையார் கோவில் வீதியில் அமைக்கப்பட்டுள்ள கோவிலின் கட்டமைப்பு 15 முதல் 20 அடி வரை சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உள்ளூர்வாசி கவியரசு கூறுகையில், “சின்னவேடம்பட்டியின் மற்றொரு வீதியைச் சேர்ந்த ஒரு குழுவினர் சாலையை ஆக்கிரமித்து விளையாட்டு மாரியம்மன் கோவிலை அமைத்துள்ளனர். இதனால், 30 அடியாக இருந்த சாலையின் அகலம் 10 அடியாக குறைந்துள்ளது. இதனால், பிள்ளையார் கோவில் வீதியில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது,” என்கிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக கோவை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், கோவை மாநகராட்சி நிர்வாகத்திடம் குறைதீர்ப்பு முகாமில் மனு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கோவை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. அதில், வார்டு எண்.42-க்குட்பட்ட சின்னவேடம்பட்டியில் உள்ள பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்த பொதுமக்கள் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில், பிள்ளையார் கோவில் வீதியில் அமைக்கப்பட்டுள்ள கோவிலின் கட்டமைப்பு 15 முதல் 20 அடி வரை சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உள்ளூர்வாசி கவியரசு கூறுகையில், “சின்னவேடம்பட்டியின் மற்றொரு வீதியைச் சேர்ந்த ஒரு குழுவினர் சாலையை ஆக்கிரமித்து விளையாட்டு மாரியம்மன் கோவிலை அமைத்துள்ளனர். இதனால், 30 அடியாக இருந்த சாலையின் அகலம் 10 அடியாக குறைந்துள்ளது. இதனால், பிள்ளையார் கோவில் வீதியில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது,” என்கிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக கோவை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், கோவை மாநகராட்சி நிர்வாகத்திடம் குறைதீர்ப்பு முகாமில் மனு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.