கோவை : கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத்திடம் 85 பேர் கோரிக்கை மனுக்களை அளித்தனர். அதில், பொதுமக்களின் 5 கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.
கோவை : கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத்திடம் 85 பேர் கோரிக்கை மனுக்களை அளித்தனர். அதில், பொதுமக்களின் 5 கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.
கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத்தின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி முன்னிலை வகித்தார்கள். இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலரிடம் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் 85 கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதில், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் குறித்தும் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர். இதில், கிழக்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒரு பயனாளிக்கு குடிநீர் வரிவிதிப்பு புத்தகத்தையும், ஒரு பயனாளிக்கு சொத்துவரிவிதிப்பு பெயர் மாற்றம் உத்தரவையும், ஒரு மனுதாரரின் கோரிக்கையின்படி வீதி அமைவிடம் தீர்வு அளித்தும், மத்திய மண்டலத்தைச் சேர்ந்த ஒரு பயனாளிக்கு சொத்துவரி வார்டு மாற்றம் உத்தரவையும் ஆக மொத்தம் 5 பேரின் கோரிக்கையின் மீது மாநகராட்சி ஆணையாளர் அவர்களால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இக்கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாநகராட்சி ஆணையாளர் இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும், ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் எனவும், பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு தங்கள் கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் எனவும், குடிநீர் வசதி, சுகாதார வசதி, மின்விளக்கு வசதி மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகள் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், ஒவ்வொரு மண்டலத்திலும் மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது எனவும் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாநகரப்பொறியாளர் ஆ.லட்சுமணன், உதவி ஆணையர்கள் தி.ரா.ரவி, சரவணன், அண்ணாத்துரை, மோகனசுந்தரி, ஏ.ஜெ.செந்தில்அரசன், ம.செல்வன், மகேஷ்கனகராஜ், நகரமைப்பு அலுவலர் (திட்டம்) ரவிச்சந்திரன், நகர்நல அலுவலர் மரு.கே.சந்தோஷ்குமார், வருங்கால வைப்புநிதி கணக்கு அலுவலர் மாணிக்கம், மாநகராட்சி அனைத்து அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத்தின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி முன்னிலை வகித்தார்கள். இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலரிடம் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் 85 கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதில், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் குறித்தும் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர். இதில், கிழக்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒரு பயனாளிக்கு குடிநீர் வரிவிதிப்பு புத்தகத்தையும், ஒரு பயனாளிக்கு சொத்துவரிவிதிப்பு பெயர் மாற்றம் உத்தரவையும், ஒரு மனுதாரரின் கோரிக்கையின்படி வீதி அமைவிடம் தீர்வு அளித்தும், மத்திய மண்டலத்தைச் சேர்ந்த ஒரு பயனாளிக்கு சொத்துவரி வார்டு மாற்றம் உத்தரவையும் ஆக மொத்தம் 5 பேரின் கோரிக்கையின் மீது மாநகராட்சி ஆணையாளர் அவர்களால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இக்கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாநகராட்சி ஆணையாளர் இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும், ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் எனவும், பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு தங்கள் கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் எனவும், குடிநீர் வசதி, சுகாதார வசதி, மின்விளக்கு வசதி மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகள் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், ஒவ்வொரு மண்டலத்திலும் மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது எனவும் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாநகரப்பொறியாளர் ஆ.லட்சுமணன், உதவி ஆணையர்கள் தி.ரா.ரவி, சரவணன், அண்ணாத்துரை, மோகனசுந்தரி, ஏ.ஜெ.செந்தில்அரசன், ம.செல்வன், மகேஷ்கனகராஜ், நகரமைப்பு அலுவலர் (திட்டம்) ரவிச்சந்திரன், நகர்நல அலுவலர் மரு.கே.சந்தோஷ்குமார், வருங்கால வைப்புநிதி கணக்கு அலுவலர் மாணிக்கம், மாநகராட்சி அனைத்து அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.