கோவை : மேட்டுப்பாளையத்தில் காதலர்கள் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கோவை : மேட்டுப்பாளையத்தில் காதலர்கள் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கடந்த 25-ம் தேதி மேட்டுப்பாளையம் பகுதியில் கார்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கனகராஜ் - வர்ஷினி பிரியா என்ற காதல் ஜோடிகளை கனகராஜின் சகோதரர் வினோத் என்பவர் சரமாரியாக வெட்டியதில் கனகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வர்ஷினி பிரியா கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த ஆணவக் கொலையை கண்டித்த பல்வேறு சமூக அமைப்புகள், அவர்களுக்கு நீதி வேண்டும் என்றும், அரசு வழங்கக்கூடிய சலுகைகள், நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்று பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

இதன் ஒரு பகுதியாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சிவானந்த காலனி பவர் ஹவுஸ் முன்பு நடைபெற்றது. அக்கட்சியின் பொது செயலாளர் சிந்தனை செல்வன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், சாதி ஆணவப் படுகொலைக்கு தனி சட்டம் இயற்றிட வேண்டும் என்றும், மேற்கு மாவட்டங்களை சாதிய வன்கொடுமை பகுதியாக அறிவிக்க வேண்டும் எனவும், ஆணவப் படுகொலையில் ஈடுபடுவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுபினர்.

கடந்த 25-ம் தேதி மேட்டுப்பாளையம் பகுதியில் கார்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கனகராஜ் - வர்ஷினி பிரியா என்ற காதல் ஜோடிகளை கனகராஜின் சகோதரர் வினோத் என்பவர் சரமாரியாக வெட்டியதில் கனகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வர்ஷினி பிரியா கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த ஆணவக் கொலையை கண்டித்த பல்வேறு சமூக அமைப்புகள், அவர்களுக்கு நீதி வேண்டும் என்றும், அரசு வழங்கக்கூடிய சலுகைகள், நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்று பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

இதன் ஒரு பகுதியாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சிவானந்த காலனி பவர் ஹவுஸ் முன்பு நடைபெற்றது. அக்கட்சியின் பொது செயலாளர் சிந்தனை செல்வன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், சாதி ஆணவப் படுகொலைக்கு தனி சட்டம் இயற்றிட வேண்டும் என்றும், மேற்கு மாவட்டங்களை சாதிய வன்கொடுமை பகுதியாக அறிவிக்க வேண்டும் எனவும், ஆணவப் படுகொலையில் ஈடுபடுவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுபினர்.