கோவை : சரவணம்பட்டி அருகே காவல் நிலையத்தில் கையெழுத்து போட வந்த இரண்டு இளைஞர்கள் மாயமானதையடுத்து, பெற்றோர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : சரவணம்பட்டி அருகே காவல் நிலையத்தில் கையெழுத்து போட வந்த இரண்டு இளைஞர்கள் மாயமானதையடுத்து, பெற்றோர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கணபதி பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட கோஷ்டி மோதலில் ராஜேஷ், பிரசாந்த் என்ற இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், இவர்கள் மீது காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில், குண்டர் சட்டம் பாய்ந்தது. அதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் சிறையிலிருந்து பிணையில் வந்து தினந்தோறும் சரவணம்பட்டி காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தனர்.

இந்த நிலையில், இன்று வழக்கம்போல சரவணம்பட்டி காவல்நிலையத்திற்கு கையெழுத்து போட வந்தவர்கள் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, பல்வேறு பகுதிகளில் தேடிய பெற்றோர் மற்றும் உறவினர்கள் இளைஞர்கள் வீடு திரும்பாததையடுத்து, காவல் நிலையம் சென்றனர். மேலும், அருகே உள்ள நண்பர்களிடமும் இளைஞர்களின் உறவினர்கள் விசாரணை செய்ததில் காவல் நிலையம் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து, ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்தை பெற்றோர்களும், உறவினர்களும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கணபதி பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட கோஷ்டி மோதலில் ராஜேஷ், பிரசாந்த் என்ற இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், இவர்கள் மீது காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில், குண்டர் சட்டம் பாய்ந்தது. அதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் சிறையிலிருந்து பிணையில் வந்து தினந்தோறும் சரவணம்பட்டி காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தனர்.

இந்த நிலையில், இன்று வழக்கம்போல சரவணம்பட்டி காவல்நிலையத்திற்கு கையெழுத்து போட வந்தவர்கள் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, பல்வேறு பகுதிகளில் தேடிய பெற்றோர் மற்றும் உறவினர்கள் இளைஞர்கள் வீடு திரும்பாததையடுத்து, காவல் நிலையம் சென்றனர். மேலும், அருகே உள்ள நண்பர்களிடமும் இளைஞர்களின் உறவினர்கள் விசாரணை செய்ததில் காவல் நிலையம் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து, ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்தை பெற்றோர்களும், உறவினர்களும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.