நீலகிரி : கூடலூரை அடுத்த நடுவட்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வீடு கட்ட அனுமதி பெற்று முறைகேடாக வணிக ரீதியில் இயங்கி வந்த சொகுசு விடுதிகளுக்கு அதிகாரிகள் இன்று சீல் வைத்தனர்.
நீலகிரி : கூடலூரை அடுத்த நடுவட்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வீடு கட்ட அனுமதி பெற்று முறைகேடாக வணிக ரீதியில் இயங்கி வந்த சொகுசு விடுதிகளுக்கு அதிகாரிகள் இன்று சீல் வைத்தனர்.
மலைப் பிரதேசங்களில் உரிய அனுமதி பெறாமல் கட்டப்படும் வணிக ரீதியிலான கட்டிடங்கள், தங்கும் சொகுசு விடுதிகள் உள்ளிட்டவை மீது நீதிமன்ற உத்தரவின்படி சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கனவே, நீலகிரி மாவட்டத்தில் மசினகுடி பகுதியில் பல தங்கும் சொகுசு விடுதிகள் சீல் வைக்கப்பட்டன.
இந்த நிலையில், நடுவம் பேருராட்சிக்குட்பட்ட வுட்புரூக் பகுதியில் 11 நபர்கள் பெயரில் வீடு கட்ட அனுமதி பெற்று கட்டப்பட்ட கட்டிடங்களில் ஒரே நிர்வாகத்தின் மூலம் சொகுசு விடுதிகள் இயங்கி வந்துள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு கிடைத்த புகாரின் பேரில், நடுவட்டம் பேரூராட்சி செயல் அலுவலர் இப்ராகிம் தலைமையில் அதிகாரிகள் காவல்துறை உதவியுடன் நடத்திய ஆய்வில் தகவல் உறுதிப்படுத்தப்பட்டு, கடந்த வாரம் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, இன்று மாலை ஐந்து மணிக்கு 11 விடுதிகளுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனை தொடர்ந்து, இங்குள்ள கட்டிடங்களுக்கான மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு ஆகியவற்றையும் அதிகாரிகள் துண்டித்தனர்.
மலைப் பிரதேசங்களில் உரிய அனுமதி பெறாமல் கட்டப்படும் வணிக ரீதியிலான கட்டிடங்கள், தங்கும் சொகுசு விடுதிகள் உள்ளிட்டவை மீது நீதிமன்ற உத்தரவின்படி சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கனவே, நீலகிரி மாவட்டத்தில் மசினகுடி பகுதியில் பல தங்கும் சொகுசு விடுதிகள் சீல் வைக்கப்பட்டன.
இந்த நிலையில், நடுவம் பேருராட்சிக்குட்பட்ட வுட்புரூக் பகுதியில் 11 நபர்கள் பெயரில் வீடு கட்ட அனுமதி பெற்று கட்டப்பட்ட கட்டிடங்களில் ஒரே நிர்வாகத்தின் மூலம் சொகுசு விடுதிகள் இயங்கி வந்துள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு கிடைத்த புகாரின் பேரில், நடுவட்டம் பேரூராட்சி செயல் அலுவலர் இப்ராகிம் தலைமையில் அதிகாரிகள் காவல்துறை உதவியுடன் நடத்திய ஆய்வில் தகவல் உறுதிப்படுத்தப்பட்டு, கடந்த வாரம் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, இன்று மாலை ஐந்து மணிக்கு 11 விடுதிகளுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனை தொடர்ந்து, இங்குள்ள கட்டிடங்களுக்கான மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு ஆகியவற்றையும் அதிகாரிகள் துண்டித்தனர்.