கோவை : கர்நாடக அணைகளில் இருந்து காவிரி நீரை தமிழகத்திற்கு திறந்துவிட கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோவை : கர்நாடக அணைகளில் இருந்து காவிரி நீரை தமிழகத்திற்கு திறந்துவிட கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் கர்நாடகாவில் உள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் அன்றாட பயன்பாட்டிற்கே தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினை நிலவி வருகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நிலத்தடி நீர் மட்டம் குறைந்திருப்பதால், மக்கள் மழை எதிர்பார்த்துள்ளனர். இதனிடையே, காவிரியில் இருந்து கர்நாடகம் தண்ணீரை திறந்து விட்டால் பற்றாக்குறை பிரச்சினை ஓரளவுக்கு கட்டுக்குள் வர வாய்ப்புள்ளதாகக் கருதப்பட்டது.
இந்த நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை காணப்படுவதால் தண்ணீரை திறக்கும் முடிவுக்கு கர்நாடகம் வந்துள்ளது. இதற்கு முதலமைச்சர் குமாரசாமியும் ஒப்புதல் அளித்துள்ளார்.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி கர்நாடகம் தமிழகத்திற்கு ஜூனில் மட்டும் 9.19 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டும். இதை உடனடியாக வழங்கக் கோரி கடந்த மாதம் தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது. அதையடுத்து, தமிழகத்திற்கு தண்ணீரை வழங்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் கர்நாடகாவில் உள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் அன்றாட பயன்பாட்டிற்கே தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினை நிலவி வருகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நிலத்தடி நீர் மட்டம் குறைந்திருப்பதால், மக்கள் மழை எதிர்பார்த்துள்ளனர். இதனிடையே, காவிரியில் இருந்து கர்நாடகம் தண்ணீரை திறந்து விட்டால் பற்றாக்குறை பிரச்சினை ஓரளவுக்கு கட்டுக்குள் வர வாய்ப்புள்ளதாகக் கருதப்பட்டது.
இந்த நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை காணப்படுவதால் தண்ணீரை திறக்கும் முடிவுக்கு கர்நாடகம் வந்துள்ளது. இதற்கு முதலமைச்சர் குமாரசாமியும் ஒப்புதல் அளித்துள்ளார்.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி கர்நாடகம் தமிழகத்திற்கு ஜூனில் மட்டும் 9.19 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டும். இதை உடனடியாக வழங்கக் கோரி கடந்த மாதம் தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது. அதையடுத்து, தமிழகத்திற்கு தண்ணீரை வழங்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.