நீலகிரி : உதகையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் ரூ. 8 லட்சம் மதிப்பிலான உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
நீலகிரி : உதகையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் ரூ. 8 லட்சம் மதிப்பிலான உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் உதகையில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது. இதில், 8 லட்சம் மதிப்பிலான உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பயனாளிகளுக்கு வழங்கினார். நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு காசோலைகள், தையல் இயந்திரங்கள், பேட்டரி கார்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்காக அந்த இடத்திலேயே மருத்துவம் மற்றும் ஆதார் சம்பந்தமான வேலைப்பாடுகளையும் உடனுக்குடன் செய்து கொடுத்தார்.

தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் கொடுத்த மனுவிற்கு உடனடியாக தீர்வு காணும் வகையில், அந்தத் துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டார்.

தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் உதகையில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது. இதில், 8 லட்சம் மதிப்பிலான உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பயனாளிகளுக்கு வழங்கினார். நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு காசோலைகள், தையல் இயந்திரங்கள், பேட்டரி கார்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்காக அந்த இடத்திலேயே மருத்துவம் மற்றும் ஆதார் சம்பந்தமான வேலைப்பாடுகளையும் உடனுக்குடன் செய்து கொடுத்தார்.

தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் கொடுத்த மனுவிற்கு உடனடியாக தீர்வு காணும் வகையில், அந்தத் துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டார்.