கோவை : மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, சிறுவாணி அணையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
கோவை : மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, சிறுவாணி அணையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
கேரளாவில் தொடங்கியுள்ள தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, கோவையின் சிறுவாணி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த நான்கு நாட்களில் 110 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சனிக்கிழமை 176 மி.மீ. மழை பெய்துள்ளது. மேலும், கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறுவாணியில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் 32.5 மில்லியன் லிட்டர் தண்ணீரும், நேற்று 30 மில்லியன் லிட்டர் தண்ணீரும் சுத்திகரிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் 6.56 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 12.63 என இரட்டிப்பாகியுள்ளது.
கேரளாவில் தொடங்கியுள்ள தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, கோவையின் சிறுவாணி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த நான்கு நாட்களில் 110 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சனிக்கிழமை 176 மி.மீ. மழை பெய்துள்ளது. மேலும், கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறுவாணியில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் 32.5 மில்லியன் லிட்டர் தண்ணீரும், நேற்று 30 மில்லியன் லிட்டர் தண்ணீரும் சுத்திகரிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் 6.56 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 12.63 என இரட்டிப்பாகியுள்ளது.