இந்தியா சுற்றுலாத்துறை இணையதளத்தில் பொள்ளாச்சி, வால்பாறையை சேர்க்க மத்திய அரசுக்கு எம்.பி. சண்முகசுந்தரம் கோரிக்கை

டெல்லி : இந்தியா சுற்றுலாத்துறை இணையதளத்தில் பொள்ளாச்சி மற்றும் வால்பாறையைச் சேர்க்க வேண்டும் என மத்திய சுற்றுலாத்துறை அமைச்சரிடம் பொள்ளாச்சி எம்.பி. சண்முகசுந்தரம் நேரில் சந்தித்து மனு கொடுத்துள்ளார்.

டெல்லி : இந்தியா சுற்றுலாத்துறை இணையதளத்தில் பொள்ளாச்சி மற்றும் வால்பாறையைச் சேர்க்க வேண்டும் என மத்திய சுற்றுலாத்துறை அமைச்சரிடம் பொள்ளாச்சி எம்.பி. சண்முகசுந்தரம் நேரில் சந்தித்து மனு கொடுத்துள்ளார். 



டெல்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் எம்.பி. சண்முகசுந்தரம் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் பிரஹலாத் சிங் படேலை நேற்று சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அதில், பொள்ளாச்சி மற்றும் வால்பாறையை இந்திய சுற்றுலாத் துறை இணையதளத்தில் இணைத்து அறிவிப்பு செய்யப்பட வேண்டும் என்றும், மத்திய அரசினுடைய சுற்றுலாத்துறை உயர்மட்ட செயலாளர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினை அனுப்பி அதிக பயணிகளை ஈர்ப்பதற்காக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். 

எம்.பி.யின் இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அமைச்சர் பிரஹலாத் சிங், அதிகாரிகள் குழுமத்தை அனுப்பிட இசைவு தெரிவித்து உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...