கோவை : கோவை தாலுகாவிற்குட்பட்ட காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் காவலர்களை பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை : கோவை தாலுகாவிற்குட்பட்ட காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- பி1 பசார் சட்டம் ஒழுங்கு காவலர் ஆய்வாளர் எம். சக்திவேல் குனியமுத்தூர் சட்டம் ஒழுங்கு காவலராகவும், சி3 சாய்பாபா காலனி சட்டம் ஒழுங்கு காவலராக இருந்த பி. பெரியசாமி ஏ.எல்.ஜி.எஸ்.சி. கோவை மாநகர காவலராகவும், குனியமுத்தூர் சட்டம் ஒழுங்கு காவலர் டி.எச். கணேஷ் பி.இ.டபுள்யூ. கோவை மாநகர காவலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல, காவல் ஆய்வாளர்கள் எஸ். சிவகுமார், டி. ஜோதி, பி. சந்திரலேகா, எஸ். தெய்வசிகாமணி, ஏ.சக்திவேல், பி. கிருஷ்ணன், ஆர். ராஜேஷ், பி. விக்னேஸ்வரன், ஏ.முத்துமணி, ஏ. மசுதாபேகம் மற்றும் எஸ். சங்கீதா ஆகியோரும் பணியிடம் மாற்றப்பட்டனர்.