ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளுக்காக கோவையில் ஆய்வு செய்த கர்நாடக இளம் பொறியாளர்கள்

கோவை : கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கர்நாடகாவைச் சேர்ந்த 37 பொறியாளர்கள் திட்டப் பணிகளை ஆய்வு செய்தனர்.

கோவை : கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கர்நாடகாவைச் சேர்ந்த 37 பொறியாளர்கள் திட்டப் பணிகளை ஆய்வு செய்தனர். 



குளங்கள் சீரமைப்பு, திடக்கழிவு மேலாண்மை, சோலார் மின்நிலையம், மாதிரி சாலைகள் மற்றும் சூயஸ் நிறுவனத்தின் மூலம் 24 மணிநேரமும் குடிநீர் விநியோகித்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த திட்டப் பணிகளுக்காக கர்நாடகாவைச் சேர்ந்த 37 இளம் பொறியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கர்நாடக நகர்ப்புற ஆய்வு நிறுவனத்தின் ஆதரவுடன், தமிழக நகர்ப்புற ஆய்வு நிறுவனத்தின் ஏற்பாட்டில் பொறியாளர்கள் கோவையில் ஆய்வு மேற்கொண்டனர். 



இரண்டு நாட்கள் பயணத்தின் ஒரு பகுதியாக, ஜவகர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டம் மற்றும் 24 மணிநேர குடிநீர் விநியோக அதிகாரிகள், கோவை மாநகராட்சி அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து, கர்நாடகா இளம் பொறியாளர்கள் கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் பல்வேறு திட்டப்பணிகள் ஆய்வு மேற்கொண்டனர். நாளையும் இந்த ஆய்வு பணிகளை தொடர்கின்றனர்.



இது குறித்து மூத்த அதிகாரிகள் கூறுகையில், "பொதுவாக டி.ஐ.யூ.எஸின் பயிற்சி நிகழ்ச்சிகள் நமது மாநிலத்தில் உள்ள அதிகாரிகளுக்கு மட்டுமே நடக்கும். வெளி மாநிலத்தை சேர்ந்த அதிகாரிகளுக்கு நடத்துவது இதுவே முதல்முறையாகும். இதன்மூலம், பல்வேறு திட்டங்களை வெளிப்படுத்தவும், அதனை புரிந்து கொள்ளவும் உதவும்," என்றார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...