கோவை : தினக்கூலி மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வலியுறுத்தி கோவையில் சி.ஐ.டி.யூ. உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை : தினக்கூலி மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வலியுறுத்தி கோவையில் சி.ஐ.டி.யூ. உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
துப்புரவு பணிகளை தனியாருக்கு கொடுப்பதைக் கண்டித்தும், மக்கள் தொகை வளர்ச்சிக்கேற்ப கூடுதல் துப்புரவு பணியாளர்களை நியமிக்க வலியுறுத்தியும், காலிப்பணியிடங்கள் அனைத்தையும் தினக்கூலி மற்றும் ஒப்பந்தப் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும், மலக்குழி மரணங்களைத் தவிர்க்க விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்த வேண்டும், தூய்மைப்பணியாளர்களிடம் அராஜகமாக நடந்து கொள்ளும் மாநகராட்சி மேற்பார்வையாளர்களின் நடவடிக்கையைக் கண்டித்து சி.ஐ.டி.யூ. உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கணி தலைமை தாங்கினார். கோரிக்கைகள் குறித்து சங்கத்தின் கோவை மாவட்ட பொதுச்செயலாளர் கே. ரத்தினகுமார் உரையாற்றினார். போராட்டத்தை வாழ்த்தி சி.ஐ.டி.யூ. மாநில துணை தலைவர் எஸ்.ஆறுமுகம், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஆறுச்சாமி, அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் நிர்வாகி ஜோதிகுமார் ஆகியோர் உரையாற்றினர்.
முன்னதாக, ஆர்ப்பாட்டத்தில் உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் கணேசன், கனகராஜ், காத்தவராயன் உள்ளிட்ட கோவை மாநகராட்சி, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஜி.ஓ. 348-ஐ அமலாக்க வேண்டும், துப்புரவு தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ., பி.எப். சலுகை ஏற்படுத்தவும், ஒப்பந்த தினக்கூலி பணியாளர்களுக்கு ரூ. 624-ஐ வழங்க வேண்டும் உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர்.
துப்புரவு பணிகளை தனியாருக்கு கொடுப்பதைக் கண்டித்தும், மக்கள் தொகை வளர்ச்சிக்கேற்ப கூடுதல் துப்புரவு பணியாளர்களை நியமிக்க வலியுறுத்தியும், காலிப்பணியிடங்கள் அனைத்தையும் தினக்கூலி மற்றும் ஒப்பந்தப் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும், மலக்குழி மரணங்களைத் தவிர்க்க விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்த வேண்டும், தூய்மைப்பணியாளர்களிடம் அராஜகமாக நடந்து கொள்ளும் மாநகராட்சி மேற்பார்வையாளர்களின் நடவடிக்கையைக் கண்டித்து சி.ஐ.டி.யூ. உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கணி தலைமை தாங்கினார். கோரிக்கைகள் குறித்து சங்கத்தின் கோவை மாவட்ட பொதுச்செயலாளர் கே. ரத்தினகுமார் உரையாற்றினார். போராட்டத்தை வாழ்த்தி சி.ஐ.டி.யூ. மாநில துணை தலைவர் எஸ்.ஆறுமுகம், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஆறுச்சாமி, அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் நிர்வாகி ஜோதிகுமார் ஆகியோர் உரையாற்றினர்.
முன்னதாக, ஆர்ப்பாட்டத்தில் உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் கணேசன், கனகராஜ், காத்தவராயன் உள்ளிட்ட கோவை மாநகராட்சி, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஜி.ஓ. 348-ஐ அமலாக்க வேண்டும், துப்புரவு தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ., பி.எப். சலுகை ஏற்படுத்தவும், ஒப்பந்த தினக்கூலி பணியாளர்களுக்கு ரூ. 624-ஐ வழங்க வேண்டும் உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர்.