குடிநீர் திட்டப்பணிக்காக தோண்டப்பட்ட சாலையினை சீரமைக்கக் கோரி நல்லாம்பாளையத்தில் பொதுமக்கள் சாலை மறியல்

கோவை : குடிநீர் திட்டப்பணிகளுக்காக சாலை தோண்டப்பட்டு ஓராண்டான நிலையில், பணிகளை விரைந்து முடித்து சாலைகளை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி நல்லாம்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோவை : குடிநீர் திட்டப்பணிகளுக்காக சாலை தோண்டப்பட்டு ஓராண்டான நிலையில், பணிகளை விரைந்து முடித்து சாலைகளை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி நல்லாம்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 



கவுண்டம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டம் என்ற பெயரில் குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வந்தது. இதற்காக சாலைகள் தோண்டப்பட்டு, குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன. இந்த நிலையில், குடிநீர் திட்டப் பணிகளும், சாலைப் பணிகளும் முடிவடையாமல் ஓராண்டுக்கும் மேலாக அந்தப் பகுதி மக்கள், வாகன ஓட்டிகள், பள்ளி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பகுதியில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் தங்களுடைய பொருட்களை வியாபாரம் செய்ய முடியாத அவலம் ஏற்பட்டுள்ளது. 



மேலும், சாலையில் கொட்டப்பட்டுள்ள எம்சாண்ட் மணல் காற்று அடித்தாலும், வாகனங்கள் சென்றாலும் சாலையில் செல்பவர்களின் முகத்தில் வாரி இரைக்கிறது. ஆகையால், இந்த சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ,ஜே. உசேன் தலைமையில் அக்கட்சியினர் மற்றும் பொதுமக்கள், வியாபாரிகள் கலந்து கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து நேரில் வந்த காவல்துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரி கலாவதி, உடனடியாக இந்த சாலையை சரி செய்வதாக உறுதி அளித்த பிறகு மறியல் கைவிடப்பட்டது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...