கோவை : அன்னூர் அருகே உள்ள கடத்தூர் குளத்தை சீரமைப்பது குறித்து கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர், ஜே.சி.பி. உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்தினர்.
கோவை : அன்னூர் அருகே உள்ள கடத்தூர் குளத்தை சீரமைப்பது குறித்து கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர், ஜே.சி.பி. உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

கோவை மாவட்டம் அன்னூர் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது கடத்தூர் குளம் என்கிற காட்டம்பட்டி குளம். சுமார் 120 ஏக்கர் பரப்பளவுள்ள இந்தக் குளம் கடந்த 30 ஆண்டுகளாக நீரின்றி வறண்டு காணப்படுகிறது. கடத்தூர் குளத்தை புத்துயிரூட்டுவதற்கான ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்படுவதுடன், நீர்வழிப்பாதைகள் ஆய்வு செய்யப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு மூலம் விரிவாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்த வாரம் (ஜுலை 7) நீர் வழிப்பாதைகளை சரி செய்யும் முயற்சியின் ஒரு பகுதியாக, ஜே.சி.பி. இயந்திர உரிமையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில், ஏராளமான தன்னார்வலர்களும், ஜே.சி.பி. இயந்திர உரிமையாளர்களும் கலந்து கொண்டனர். தொடர்ந்து, காட்டம்பட்டி குளத்திலிருந்து கலங்கல் பகுதி வரை நீர்வழிப்பாதையை பார்வையிட்டனர். பின்னர், ஜே.சி.பி. வாகனம் மூலம் செய்ய வேண்டிய வேலை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.


கோவை மாவட்டம் அன்னூர் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது கடத்தூர் குளம் என்கிற காட்டம்பட்டி குளம். சுமார் 120 ஏக்கர் பரப்பளவுள்ள இந்தக் குளம் கடந்த 30 ஆண்டுகளாக நீரின்றி வறண்டு காணப்படுகிறது. கடத்தூர் குளத்தை புத்துயிரூட்டுவதற்கான ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்படுவதுடன், நீர்வழிப்பாதைகள் ஆய்வு செய்யப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு மூலம் விரிவாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்த வாரம் (ஜுலை 7) நீர் வழிப்பாதைகளை சரி செய்யும் முயற்சியின் ஒரு பகுதியாக, ஜே.சி.பி. இயந்திர உரிமையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில், ஏராளமான தன்னார்வலர்களும், ஜே.சி.பி. இயந்திர உரிமையாளர்களும் கலந்து கொண்டனர். தொடர்ந்து, காட்டம்பட்டி குளத்திலிருந்து கலங்கல் பகுதி வரை நீர்வழிப்பாதையை பார்வையிட்டனர். பின்னர், ஜே.சி.பி. வாகனம் மூலம் செய்ய வேண்டிய வேலை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
