மேட்டுப்பாளையத்தில் கல்குவாரியில் பயன்படுத்தப்படும் அதிக திறன் கொண்ட வெடியால் விவசாயிகள் பொதுமக்கள் பாதிப்பு

கோவை : மேட்டுப்பாளையத்தில் கல்குவாரியில் பயன்படுத்தப்படும் அதிக திறன் கொண்ட வெடியால் ஆழ்குழாய் கிணறுகள் சேதமடைந்து விவசாயம் பாதிக்கபடுவதுடன், குடியிருப்புகளிலும் விரிசல் ஏற்படுவதால் கிராமமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை : மேட்டுப்பாளையத்தில் கல்குவாரியில் பயன்படுத்தப்படும் அதிக திறன் கொண்ட வெடியால் ஆழ்குழாய் கிணறுகள் சேதமடைந்து விவசாயம் பாதிக்கபடுவதுடன், குடியிருப்புகளிலும் விரிசல் ஏற்படுவதால் கிராமமக்கள் அச்சமடைந்துள்ளனர்.



காரமடை அருகே படியனூர் கிராமத்தில் உள்ள இந்த கல்குவாரியில் அடிக்கடி பயங்கர சத்தத்துடன் அதிக திறன் கொண்ட மருந்துகளை பயன்படுத்தி வேட்டுகள் வைத்து கற்கள் உடைக்கப்படுகிறது. இதனால், அதில் இருந்து வெடித்து சிதறும் கற்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் அளவிற்கு பறந்து சென்று குடியிருப்புகள் மீது விழுவதால் வீடுகளின் மேற்கூரைகள் உடைப்பு ஏற்படுவதுடன், பக்கவாட்டு சுவர்களிலும் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலை உள்ளதாக அப்பகுதி கிராம மக்கள் தெரிவித்தனர்.



மேலும், விவசாய நிலங்கள் அதிகம் உள்ள இந்த கிரமத்தில், ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து கருவேப்பிலை, வாழை போன்றவை பயிர் செய்யபட்டு வரும் நிலையில், இந்த கல்குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட, ஆழமாக கற்கள் வெட்டி எடுக்கப்படுதால், நிலத்திற்கு அடியில் இருக்கும் நீரோட்டம் பாதிக்கப்பட்டு தற்போது தண்ணீரின்றி ஆழ்குழாய்கள் அனைத்தும் வறண்டு விட்டன. 



அத்துடன் ஆழ்குழாய் கிணறுகளில் அமைக்கப்பட்ட மோட்டார்கள் இந்த வெடி அதிர்வு காரணமாக கழன்று குழிக்குள்ளேயே விழுந்து விடுவதால் விவசாயிகளுக்கு பல ஆயிரங்கள் நஷ்டம் ஏற்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர். இரவு பகலாக செயல்படும் இந்த கல்குவாரியில் இருந்து வெளியேறும் புழுதி புகையானது, பல கிலோ மீட்டர் அளவுக்கு பறப்பதால் விவசாய நிலங்களில் பயிரிட்டுள்ள பயிர்களில் படிந்து பயிர்கள் மேலும் வளர்ச்சி அடையாமல் கல்குவாரி புழுதி மண்கள் தடுப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். 



மேலும், இந்த புழுதி மண் குடியிருப்புகளுக்கும் பரவுவதால், அங்கு கால்நடைகளுக்கு வைக்கபட்டுள்ள குடி தண்ணீரிலும் இவை கலப்பதால் அதனை குடிக்கும் மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு வயிற்றில் கட்டி ஏற்பட்டு உயிரிழப்பதாக தெரிவித்தனர். இது கால்நடைகளுக்கு மட்டுமின்றி மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தி வருவதாக அப்பகுதி கிராம மக்கள் இதன் காரணமாக, சிலருக்கு புற்றுநோய் பாதிப்பும் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். தனி நபர் லாபத்திற்காக ஒரு கிராமத்தையே நாசமாக்கும் இது போன்ற கல்குவாரிகளை தடை செய்யக்கோரி சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ள படியனூர் கிராம மக்கள், இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...