குவைத்தில் கொத்தடிமையாக இருக்கும் இரு பெண்களை மீட்கக்கோரி திருப்பூர் ஆட்சியரிடம் மனு

திருப்பூர் : குவைத் நாட்டில் கொத்தடிமையாக நடத்தப்பட்டு வரும் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த இரு பெண்களை மீட்டுத் தரக்கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

திருப்பூர் : குவைத் நாட்டில் கொத்தடிமையாக நடத்தப்பட்டு வரும் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த இரு பெண்களை மீட்டுத் தரக்கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்தவர்கள் திருமூர்த்தி மற்றும் செல்வம். இவர்கள் இருவரும் அதே பகுதியில் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். திருமூர்த்தியின் மனைவி பெயர் ராஜேஸ்வரி. செல்வம் என்பவரின் மனைவி பெயர் வசந்தாமணி. இவர்கள் இருவருக்கும் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி செல்வராஜ் என்ற இடைத்தரகர் அறிமுகமாகி உள்ளார். அவரது பேச்சை கேட்டு, ராஜேஸ்வரி மற்றும் வசந்தாமணி ஆகிய இருவரும் குவைத் நாட்டில் வீட்டு வேலைக்கு கடந்த மே மாதம் அனுப்பியுள்ளனர். 



ஒரு மாதத்திற்கு பிறகு, சம்பளம் முறையாக கொடுக்காமல், கொடுமைப்படுத்தி வருவதாக வீடியோ மூலம் பேசி தனது குடும்பத்தாருக்கு அந்த இரு பெண்களும் அனுப்பியுள்ளனர். அதன் பிறகு, கடந்த இரு மாதங்களாக எந்தவிதமான தொடர்பும் அவர்களிடத்தில் இல்லை என்றும், இடைத்தரகர் செல்வராஜூம் முறையான பதிலை கூற மறுப்பதாகவும் கூறி, குவைத் நாட்டில் கொத்தடிமையாக இருக்கும் இரு பெண்களையும் மீட்டு தரக்கோரி இரு குடும்பத்தினரின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டது. 

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...