கோவை : முறையற்ற வகையில் இயங்கும் ரெட் டேக்சி மற்றும் ஓலா நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வாடகை கார் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை : முறையற்ற வகையில் இயங்கும் ரெட் டேக்சி மற்றும் ஓலா நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வாடகை கார் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை மாவட்ட வாடகை கார் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில், முறையற்ற வகையில் இயங்கும் ரெட் டேக்சி மற்றும் ஓலா நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தி மனு அளிக்கபட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், “ரெட் டேக்சி மற்றும் ஓலா நிறுவனங்கள் வெகு தூர பயணங்களுக்கு ஒரு வழி பயண வாடகை மட்டுமே வசூல் செய்வது, அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு உதவிகள் வழங்காமலும், பயணிகள் அளிக்கும் புகாரின் அடிப்படையில் ஓட்டுனர்களை பணி நீக்கம் செய்வது, செடேன் கார்களில் அதிக அளவில் பயணிகளை ஏற்றி செல்வது, ரத்து செய்யும் வாடகைக்கு பணம் பிடிப்பது என பல்வேறு முறைகேடான வகையில் கார்களை இயக்குவதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், இந்த நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து உள்ளோம், எனத் தெரிவித்தனர்.
கோவை மாவட்ட வாடகை கார் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில், முறையற்ற வகையில் இயங்கும் ரெட் டேக்சி மற்றும் ஓலா நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தி மனு அளிக்கபட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், “ரெட் டேக்சி மற்றும் ஓலா நிறுவனங்கள் வெகு தூர பயணங்களுக்கு ஒரு வழி பயண வாடகை மட்டுமே வசூல் செய்வது, அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு உதவிகள் வழங்காமலும், பயணிகள் அளிக்கும் புகாரின் அடிப்படையில் ஓட்டுனர்களை பணி நீக்கம் செய்வது, செடேன் கார்களில் அதிக அளவில் பயணிகளை ஏற்றி செல்வது, ரத்து செய்யும் வாடகைக்கு பணம் பிடிப்பது என பல்வேறு முறைகேடான வகையில் கார்களை இயக்குவதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், இந்த நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து உள்ளோம், எனத் தெரிவித்தனர்.