கோவை : தனியார் கல்லூரிகளில் அரசாணை ஜி.ஒ 92ஐ அமல்படுத்தக்கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
கோவை : தனியார் கல்லூரிகளில் அரசாணை ஜி.ஒ 92ஐ அமல்படுத்தக்கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

கோவை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய மாணவர் சங்கம் சார்பாக 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்து மனு அளித்தனர். பெரும்பாலான தனியார் கல்லூரிகளில் எஸ்.சி / எஸ்.டி கோட்டாவில் படிக்கும் மாணவர்களுக்கு டூயூசன் கட்டணம், விடுதி கட்டணம் முழுவதும் இலவசம் ஆகிய உரிமைகளை வழங்கக்கூடிய அரசாணையை தனியார் கல்லூரிகளில் அமல்படுத்தக்கோரி மனுவில் குறிப்பிட்டு இருந்தனர். மேலும், அண்மையில் தனியார் கல்லூரி (ஆர்.வி.எஸ் கலைக்கல்லூரி) மாணவர்களிடம் கட்டணம் வசூலித்ததும், கட்டணம் கட்ட இயலாத மாணவர்களை விடுதியில் இருந்து வெளியே அனுப்பியதை கண்டித்து கடந்த 5ம் தேதி ஆட்சியர் ஆலுவலகத்தில் போராட்டம் செய்து கைதானதனையும் புகார் அளித்ததையும் மனதில் வைத்துக்கொண்டு மாணவர்களை பழிவாங்கும் நோக்கில் நிர்வாகம் செயல்பட்டு வருவதாக அவர்கள் கூறினர். எனவே, இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் மனு அளித்தனர்.

கோவை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய மாணவர் சங்கம் சார்பாக 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்து மனு அளித்தனர். பெரும்பாலான தனியார் கல்லூரிகளில் எஸ்.சி / எஸ்.டி கோட்டாவில் படிக்கும் மாணவர்களுக்கு டூயூசன் கட்டணம், விடுதி கட்டணம் முழுவதும் இலவசம் ஆகிய உரிமைகளை வழங்கக்கூடிய அரசாணையை தனியார் கல்லூரிகளில் அமல்படுத்தக்கோரி மனுவில் குறிப்பிட்டு இருந்தனர். மேலும், அண்மையில் தனியார் கல்லூரி (ஆர்.வி.எஸ் கலைக்கல்லூரி) மாணவர்களிடம் கட்டணம் வசூலித்ததும், கட்டணம் கட்ட இயலாத மாணவர்களை விடுதியில் இருந்து வெளியே அனுப்பியதை கண்டித்து கடந்த 5ம் தேதி ஆட்சியர் ஆலுவலகத்தில் போராட்டம் செய்து கைதானதனையும் புகார் அளித்ததையும் மனதில் வைத்துக்கொண்டு மாணவர்களை பழிவாங்கும் நோக்கில் நிர்வாகம் செயல்பட்டு வருவதாக அவர்கள் கூறினர். எனவே, இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் மனு அளித்தனர்.