பட்டா நிலத்தை குடிசை மாற்று வாரிய நிலம் என காலிச் செய்ய சொல்லி நிர்பந்தம் : மேல்சட்டை இல்லாமல் மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை : பட்டா நிலத்தை குடிசை மாற்று வாரிய நிலம் என காலிச் செய்ய சொல்லி நிர்பந்தப்படுத்துவதாகக் கூறி மேல்சட்டை இல்லாமல் பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை : பட்டா நிலத்தை குடிசை மாற்று வாரிய நிலம் என காலிச் செய்ய சொல்லி நிர்பந்தப்படுத்துவதாகக் கூறி மேல்சட்டை இல்லாமல் பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை அருகே கோவைப்புதூர் பகுதியில் குடியிருப்பு மனைகளுக்கு அருகே ஐசுவரியா லே அவுட் என்ற பெயரில் தனியார் நிறுவனம் சார்பில் வீட்டு மனைகள் பிரிக்கப்பட்டுள்ளது. இங்கு இடம் வாங்கியுள்ள 30-க்கும் மேற்பட்டோர் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளிக்க வந்தனர். அப்போது, அவர்கள் மேல் சட்டையைக் கழற்றி விட்டு முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பிற்கு நின்றிருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்திய போது, ஐஸ்வர்யா லே அவுட்டில் தாங்கள் இடம் வாங்கியுள்ளதாகவும், ஆனால், அந்த இடத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் என்ற பெயரில் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். முறையான ஆவணங்களுடன் சிறுக, சிறுக சேமித்த பணத்தை கொண்டு வாங்கிய நிலத்தை அரசு நிலம் எனக் கூறுவதால், தங்கள் அதிருப்தியை தெரிவிக்க மனு அளிக்க வந்ததாக அவர்கள் கூறினர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...