கூடலூரில் யானை தாக்கியதில் தலைக்குப்புற கவிழ்ந்த பால்வண்டி : அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய ஓட்டுநர்

நீலகிரி : கூடலூர் அருகே இன்று காலை பால் ஏற்றி சென்ற வண்டியை காட்டு யானை தாக்கியதில் வண்டி நிலை தடுமாறி தலைகீழாக விழுந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.


நீலகிரி : கூடலூர் அருகே இன்று காலை பால் ஏற்றி சென்ற வண்டியை காட்டு யானை தாக்கியதில் வண்டி நிலை தடுமாறி தலைகீழாக விழுந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.



நீலகிரி மாவட்டம் கூடலூரை சுற்றியுள்ள பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகம் காணப்படுவது வழக்கம். இந்த நிலையில், இன்று காலை தொரப்பள்ளி பகுதிக்கு வயல் வழியே பால் எடுத்துச் சென்று கொண்டிருந்த ஜீப்பினை அவ்வழியாக வந்த காட்டு யானை ஆக்ரோஷத்துடன் தாக்கியது. இதில், ஜீப் கவிழ்ந்து சாலையில் குப்புற விழுந்தது. இதன் காரணமாக சாலையில் பால் கீழே கொட்டியது இதைத்தொடர்ந்து, வண்டி ஓட்டுநர் ராஜா எழுப்பிய கூச்சலை அடுத்து, அங்கிருந்தவர்கள் ஓடிவந்து ராஜாவை மீட்டனர். 



இதனிடையே, தொரப்பள்ளிப் பகுதியில் தொடர்ந்த அச்சுறுத்தி வரும் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...