டெல்லி : மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளித்து தமிழக அரசு இயற்றிய 2 சட்ட மசோதாக்களும் நிராகரிக்கப்பட்டு விட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளித்து தமிழக அரசு இயற்றிய 2 சட்ட மசோதாக்களும் நிராகரிக்கப்பட்டு விட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்புகளில் சேர தேசிய அளவில் நடைபெறும் நீட் தகுதித் தேர்வில் வெற்றிப் பெறவேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையில், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மாணவர் சேர்க்கை சட்டம், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை சட்டம் என இரு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்பட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், இந்த இரு சட்ட மசோதாக்களுக்கும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய உள்துறை அமைச்சகம், சுகாதாரத்துறை அமைச்சகம், மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் ஆகியவைகளுக்கு உத்தரவிடவேண்டும்.
இந்த சட்ட மசோதாக்களுக்கு குறித்த காலத்தில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப்பட்டிருந்தால், அரியலூர் மாணவி அனிதா மரணம் நிகழ்ந்திருக்காது. அவருக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்திருக்கும். நாடாளுமன்ற குழு பரிந்துரையின்படியும், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படியும், மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் அந்தந்த மாநிலங்களே சொந்த நடைமுறையை பின்பற்றிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனக் கோரியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில், கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக அரசு இரு சட்டமசோதாக்களை இயற்றி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியது. அவற்றை அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ஆம் தேதி குடியரசுத் தலைவர் நிறுத்தி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், இந்த சட்டமசோதாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதா..? நிராகரிக்கப்பட்டுள்ளதா..? என கேள்வி எழுப்பினர்.
இது தொடர்பாக மத்திய உள்துறை சார்பு செயலாளரிடம் கேட்ட போது, இரு மசோதாக்களும் நிராகரிக்கப்பட்டு விட்டதாக கூறியதாக, மத்திய அரசுத் தரப்பில் தெரிவித்தனர். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசு அனுப்பிய 2 சட்ட மசோதாக்கள் எப்போது பெறப்பட்டது..? அந்த மசோதாக்கள் எப்போது நிராகரிக்கப்பட்டது..? என்பது உள்ளிட்ட விவரங்களை வரும் 16-ஆம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய உ த்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்புகளில் சேர தேசிய அளவில் நடைபெறும் நீட் தகுதித் தேர்வில் வெற்றிப் பெறவேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையில், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மாணவர் சேர்க்கை சட்டம், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை சட்டம் என இரு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்பட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், இந்த இரு சட்ட மசோதாக்களுக்கும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய உள்துறை அமைச்சகம், சுகாதாரத்துறை அமைச்சகம், மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் ஆகியவைகளுக்கு உத்தரவிடவேண்டும்.
இந்த சட்ட மசோதாக்களுக்கு குறித்த காலத்தில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப்பட்டிருந்தால், அரியலூர் மாணவி அனிதா மரணம் நிகழ்ந்திருக்காது. அவருக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்திருக்கும். நாடாளுமன்ற குழு பரிந்துரையின்படியும், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படியும், மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் அந்தந்த மாநிலங்களே சொந்த நடைமுறையை பின்பற்றிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனக் கோரியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில், கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக அரசு இரு சட்டமசோதாக்களை இயற்றி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியது. அவற்றை அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ஆம் தேதி குடியரசுத் தலைவர் நிறுத்தி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், இந்த சட்டமசோதாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதா..? நிராகரிக்கப்பட்டுள்ளதா..? என கேள்வி எழுப்பினர்.
இது தொடர்பாக மத்திய உள்துறை சார்பு செயலாளரிடம் கேட்ட போது, இரு மசோதாக்களும் நிராகரிக்கப்பட்டு விட்டதாக கூறியதாக, மத்திய அரசுத் தரப்பில் தெரிவித்தனர். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசு அனுப்பிய 2 சட்ட மசோதாக்கள் எப்போது பெறப்பட்டது..? அந்த மசோதாக்கள் எப்போது நிராகரிக்கப்பட்டது..? என்பது உள்ளிட்ட விவரங்களை வரும் 16-ஆம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய உ த்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.