கோவை : சூலூர் அருகே தனியார் தோட்டத்தின் உணவுகளை உட்கொண்ட 5 மயில்கள் உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
கோவை : சூலூர் அருகே தனியார் தோட்டத்தின் உணவுகளை உட்கொண்ட 5 மயில்கள் உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

கருமத்தம்பட்டி அருகே தனியாருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்குள்ள விவசாய நிலத்தில் 5 மயில்கள் உயிரிழந்து கிடப்பதாக அங்குள்ள பொதுமக்கள், போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

அதன் பேரில், விரைந்து வந்த சையத் அலி இயற்கை வரலாறு மற்றும் பறவைகள் ஆராய்ச்சி மையத்தின் குழுவினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மயில்களின் சடலங்களை மீட்டு பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்.

அதில், மர்ம நபர்கள் திட்டமிட்டே மயில்களுக்கு விஷம் வைத்து கொலை செய்தது தெரிய வந்தது. மேலும், அப்பகுதியில் கோழியின் இறந்த உடல்களும் காணப்பட்டது.

“அண்மை காலமாக விவசாயிகளால் மயில்கள் கொல்லப்படுவது அதிகரித்துள்ளது. இது எந்தவொரு உள்நோக்கத்திற்காகவும் செய்வதில்லை. அவர்களின் பயிர்களை பாதுகாக்க வேண்டும் என இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்,” என்கிறார் உள்ளூர்வாசி.