கோவையில் தமிழக டிஜிபி திரிபாதி தலைமையில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் தொடர்பாக ஆலோசனை

கோவை: தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள சட்டம் ஒழுங்கு டிஜிபி திரிபாதி இன்று கோவையில் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

கோவை: தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள சட்டம் ஒழுங்கு டிஜிபி திரிபாதி இன்று கோவையில் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்டங்களை சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா, கோவை சரக டி ஐ ஜி கார்த்திகேயன், சேலம் சரக டி ஐ ஜி பிரதீப் குமார், கோவை, திருப்பூர், சேலம் மாநகர காவல்துறை ஆணையாளர்கள் மற்றும் 8 மாவட்டங்களை சேர்ந்த காவல்துறை கண்காணிப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் மேற்கு மண்டலத்தில் குற்ற சம்பவங்களை எவ்வாறு தடுப்பது மற்றும் ஏற்கனவே உள்ள வழக்குகள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும் ஆலோசனைகளை மேற்கொண்டனர். மேலும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் இடங்களில் எந்தமாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்வது உள்பட பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்தும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...