கோவை : பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அணைகளை தூர்வாரக் கோரி மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்திடம் பொள்ளாச்சி எம்.பி. சண்முகசுந்தரம் மனு அளித்தார்.
கோவை : பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அணைகளை தூர்வாரக் கோரி மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்திடம் பொள்ளாச்சி எம்.பி. சண்முகசுந்தரம் மனு அளித்தார்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள கடிதத்தில் கூறியிருப்பதவாது :- பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆழியாறு அணை, பரம்பிக்குளம் அணை, தூணக்கடவு அணை, பெருவாரிப்பள்ளம் அணை, சோலையாறு அணை, அப்பர் நீராறு அணை, லோயர் நீராறு அணை, அமராவதி அணை மற்றும் திருமூர்த்தி அணைகளில் தேங்கியுள்ள வண்டல் மண்ணை அப்புறப்படுத்தி அணைகளை முழுமையாக தூர்வாரி மழை காலங்களில் கிடைக்கப்பெறுகின்ற அதிக அளவு நீரை சேகரிப்பதற்கு மத்திய அரசினுடைய நீர்வளத் துறை அமைச்சகம் தூர் வாருவதற்கான நிதியை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட அணைகள் மூலமாக ஐந்து டிஎம்சி அளவுக்கு கூடுதல் நீர் சேகரிப்பு செய்வதற்கான வாய்ப்புகளை விரிவாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்திடம் விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. இந்த அணைகளை ஆய்வு செய்து அறிக்கை பெற்று உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் வாக்குறுதி அளித்து உள்ளார், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள கடிதத்தில் கூறியிருப்பதவாது :- பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆழியாறு அணை, பரம்பிக்குளம் அணை, தூணக்கடவு அணை, பெருவாரிப்பள்ளம் அணை, சோலையாறு அணை, அப்பர் நீராறு அணை, லோயர் நீராறு அணை, அமராவதி அணை மற்றும் திருமூர்த்தி அணைகளில் தேங்கியுள்ள வண்டல் மண்ணை அப்புறப்படுத்தி அணைகளை முழுமையாக தூர்வாரி மழை காலங்களில் கிடைக்கப்பெறுகின்ற அதிக அளவு நீரை சேகரிப்பதற்கு மத்திய அரசினுடைய நீர்வளத் துறை அமைச்சகம் தூர் வாருவதற்கான நிதியை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட அணைகள் மூலமாக ஐந்து டிஎம்சி அளவுக்கு கூடுதல் நீர் சேகரிப்பு செய்வதற்கான வாய்ப்புகளை விரிவாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்திடம் விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. இந்த அணைகளை ஆய்வு செய்து அறிக்கை பெற்று உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் வாக்குறுதி அளித்து உள்ளார், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.