பொள்ளாச்சியில் 16 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை : 5 பேர் கைது

கோவை : நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பான விசாரணை கூட ஓயாத நிலையில் தற்போது பொள்ளாச்சியில் மீண்டும் 16 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கோவை : நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பான விசாரணை கூட ஓயாத நிலையில் தற்போது பொள்ளாச்சியில் மீண்டும் 16 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளை குறிவைத்து பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் நாடு முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீசார், சி.பி.சி.ஐ.டி. என விசாரணைகள் கைமாறி தற்போது சி.பி.ஐ. வசம் உள்ளது. சி.பி.ஐ. அதிகாரிகள் பொள்ளாச்சி பகுதியிலேயே தங்கியிருந்து பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் என பல இடங்களில் மறைமுகமாக விசாரணைகளை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இந்த விசாரணைகள் தொடர்ந்து வரும் நிலையில், மீண்டும் ஒரு கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் அரங்கேறியது அனைத்து தரப்பினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி பகுதியில் உள்ள ஜமீன் ஊத்துக்குளியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை, கடந்த சில நாள்களாக காணவில்லை என்று அவரது தந்தை, பொள்ளாச்சி மேற்கு காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். மேலும் சிறுமி தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், அவர் நேற்று அம்பராம்பாளையம் அருகே மீட்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அந்தச் சிறுமியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பல அதிர்ச்சி சம்பவங்கள் தெரியவந்துள்ளது. இதில், குமரன் நகரைச் சேர்ந்த அமானுல்லா என்ற இளைஞரும் ,சிறுமியும் நண்பர்களாக இருந்துள்ளனர். இப்படியிருக்க சிறுமி அமானுல்லாவை சந்திக்க சென்றபோது, அவருடன் சேர்ந்து சிலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இந்த சம்பவம் தொடர்பாக நேரடியாக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார். இதில், அமானுல்லா உட்பட 5 பேரை கைது செய்துள்ள போலீசார், அவர்கள் மீது முதற்கட்டமாக போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் மேலும் சிலர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்பதால், கைது எண்ணிக்கையும் அதிகரிக்கக் கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...