திருப்பூர் : திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவ அறுவை சிகிச்சை தவறாக மேற்கொண்டதால், 21 நாட்கள் ஆகியும் பெண்ணினை வீட்டிற்கு அனுப்பாததை கண்டித்து உறவினர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
திருப்பூர் : திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவ அறுவை சிகிச்சை தவறாக மேற்கொண்டதால், 21 நாட்கள் ஆகியும் பெண்ணினை வீட்டிற்கு அனுப்பாததை கண்டித்து உறவினர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

திருப்பூர் மங்கலம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி - லட்சுமி தம்பதியரின் இரண்டாவது குழந்தை பிரசவத்திற்கு கடந்த ஜுன் மாதம் 13ம் தேதி திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்ந்த நிலையில், 14ம் தேதி லட்சுமிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதில், அறுவை சிகிச்சை தவறாக மேற்கொண்டு சிறுநீர் குழாயை அறுத்து விட்டதாகவும், அதற்கு யூரினல் ட்யூப் இணைக்கப்பட்டது.

பின்னர், 21 நாட்கள் கடந்தும் யூரினல் ட்யூபை அகற்றாமல் உயிருக்கு ஆபத்து என மருத்துவர்கள் தெரிவித்ததாகவும், அறுவை சிகிச்சை மேற்கொண்டு 9 நாட்களில் வீட்டுக்கு அனுப்பும் சூழலில், மருத்துவர்கள் தவறான சிகிச்சை மேற்கொண்டு அதனை மறைப்பதாகவும், மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் கேட்டதற்கு, “சிசேரியன் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளும் போது, சிலருக்கு சிறுநீரக பை சுருங்கி விரிந்து கொண்டிருக்கும். மேலும், உள் ரணங்களால் நோய் தொற்று ஏற்படாமல் தடுக்கவும், யூரின் ட்யூப் வைக்கப்படும். உள்ரணம் ஆறிய பின் ஒரு மாதத்தில் யூரினல் ட்யூப் அகற்றப்படும். இது வழக்கமான நடைமுறைதான்,”என தெரிவித்தார்.

திருப்பூர் மங்கலம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி - லட்சுமி தம்பதியரின் இரண்டாவது குழந்தை பிரசவத்திற்கு கடந்த ஜுன் மாதம் 13ம் தேதி திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்ந்த நிலையில், 14ம் தேதி லட்சுமிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதில், அறுவை சிகிச்சை தவறாக மேற்கொண்டு சிறுநீர் குழாயை அறுத்து விட்டதாகவும், அதற்கு யூரினல் ட்யூப் இணைக்கப்பட்டது.

பின்னர், 21 நாட்கள் கடந்தும் யூரினல் ட்யூபை அகற்றாமல் உயிருக்கு ஆபத்து என மருத்துவர்கள் தெரிவித்ததாகவும், அறுவை சிகிச்சை மேற்கொண்டு 9 நாட்களில் வீட்டுக்கு அனுப்பும் சூழலில், மருத்துவர்கள் தவறான சிகிச்சை மேற்கொண்டு அதனை மறைப்பதாகவும், மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் கேட்டதற்கு, “சிசேரியன் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளும் போது, சிலருக்கு சிறுநீரக பை சுருங்கி விரிந்து கொண்டிருக்கும். மேலும், உள் ரணங்களால் நோய் தொற்று ஏற்படாமல் தடுக்கவும், யூரின் ட்யூப் வைக்கப்படும். உள்ரணம் ஆறிய பின் ஒரு மாதத்தில் யூரினல் ட்யூப் அகற்றப்படும். இது வழக்கமான நடைமுறைதான்,”என தெரிவித்தார்.