கோவை : ராமநாதபுரம் அருகே அனுமதியின்றி மரத்தை வெட்டிய முன்னாள் காவலருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கோவை : ராமநாதபுரம் அருகே அனுமதியின்றி மரத்தை வெட்டிய முன்னாள் காவலருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

கோவை மாவட்டம் ராமநாதபுரம் அருகே உள்ள ஶ்ரீபதி நகரில் உள்ள குடியிருப்பை சேர்ந்தவர் தனது வீட்டு கட்டுமானப் பணிகளுக்கு இடையூராகவும், வீட்டிற்கு செல்ல வசதியாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக சாலை ஓரத்தில் உள்ள மரத்தை வெட்ட முடிவு செய்தார். இதை கண்ட பக்கத்து வீட்டுக்காரர், மரம் வெட்டுவதை தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தார்.

ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த அந்த நபர், தான் ஒரு முன்னாள் காவலர் எனக் கூறி மிரட்டியதுடன், மரத்தையும் தொடர்ந்து வெட்டியுள்ளார். இதனால், வருவாய் துறையினர் மற்றும் ஓசை அமைப்பின் சமூக ஆர்வலர் சையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.

“மரம் அவர்களுக்கு இடையூறாக இருந்து இருந்திருந்தால், அவர்களுக்கு அபராதம் விதித்து இருக்க மாட்டோம். அதேவேளையில், மரங்களை எளிதில் அகற்ற முடியாது என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், மரங்கள் பொதுமக்கள் சொத்துக்களாகும்,” என்றார் சமூக ஆர்வலர் சையத்.

கோவை மாவட்டம் ராமநாதபுரம் அருகே உள்ள ஶ்ரீபதி நகரில் உள்ள குடியிருப்பை சேர்ந்தவர் தனது வீட்டு கட்டுமானப் பணிகளுக்கு இடையூராகவும், வீட்டிற்கு செல்ல வசதியாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக சாலை ஓரத்தில் உள்ள மரத்தை வெட்ட முடிவு செய்தார். இதை கண்ட பக்கத்து வீட்டுக்காரர், மரம் வெட்டுவதை தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தார்.

ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த அந்த நபர், தான் ஒரு முன்னாள் காவலர் எனக் கூறி மிரட்டியதுடன், மரத்தையும் தொடர்ந்து வெட்டியுள்ளார். இதனால், வருவாய் துறையினர் மற்றும் ஓசை அமைப்பின் சமூக ஆர்வலர் சையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.

“மரம் அவர்களுக்கு இடையூறாக இருந்து இருந்திருந்தால், அவர்களுக்கு அபராதம் விதித்து இருக்க மாட்டோம். அதேவேளையில், மரங்களை எளிதில் அகற்ற முடியாது என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், மரங்கள் பொதுமக்கள் சொத்துக்களாகும்,” என்றார் சமூக ஆர்வலர் சையத்.