நீலகிரி : கோத்தகிரி அருகே உள்ள கட்டப்பெட்டு பகுதியில் இயங்கி வரும் அரசு மதுபானக் கடையை அகற்றக் கோரி மாவட்ட நிர்வாகத்திடம் கிராம மக்கள் மனு அளித்துள்ளனர்.
நீலகிரி : கோத்தகிரி அருகே உள்ள கட்டப்பெட்டு பகுதியில் இயங்கி வரும் அரசு மதுபானக் கடையை அகற்றக் கோரி மாவட்ட நிர்வாகத்திடம் கிராம மக்கள் மனு அளித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கட்டுப்பெட்டு பகுதியில் சில ஆண்டுகளாக டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த டாஸ்மாக் கடைக்கு வரும் மது பிரியர்கள் இங்கேயே குடித்துவிட்டு அப்பகுதியிலேயே தூங்கிவிடுவதால், இந்த கிராமங்களுக்கு செல்லும் பொது மக்கள் மிகவும் சிரமப்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர். மேலும், மாலை நேரத்தில் இவ்வழியாக வரும் பள்ளி மாணவ, மாணவியர் பாதிக்கப்படுவதாகக் கூறி இப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மதுபானக் கடையை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

இருப்பினும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் விரைவில் இந்த கிராம மக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கட்டுப்பெட்டு பகுதியில் சில ஆண்டுகளாக டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த டாஸ்மாக் கடைக்கு வரும் மது பிரியர்கள் இங்கேயே குடித்துவிட்டு அப்பகுதியிலேயே தூங்கிவிடுவதால், இந்த கிராமங்களுக்கு செல்லும் பொது மக்கள் மிகவும் சிரமப்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர். மேலும், மாலை நேரத்தில் இவ்வழியாக வரும் பள்ளி மாணவ, மாணவியர் பாதிக்கப்படுவதாகக் கூறி இப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மதுபானக் கடையை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

இருப்பினும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் விரைவில் இந்த கிராம மக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.