கோவை : கோவையில் பருவமழை தீவிரமடைய உள்ளதையடுத்து, வெள்ளத்தில் சிக்கியவர்களை எப்படி மீட்பது என்பது குறித்து தீயணைப்புத் துறையினரால் ஒத்திகை நடத்தப்பட்டது.
கோவை : கோவையில் பருவமழை தீவிரமடைய உள்ளதையடுத்து, வெள்ளத்தில் சிக்கியவர்களை எப்படி மீட்பது என்பது குறித்து தீயணைப்புத் துறையினரால் ஒத்திகை நடத்தப்பட்டது.

கோவை மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பருவ மழை தொடங்க உள்ளதால் மழைக்காலங்களில் பொது மக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், வெள்ளம், மற்றும் இயற்கை சீற்றங்களில் இருந்து பொதுமக்களை மீட்டெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் கோவை வடக்கு தீ அணைப்பு துறையினர் முத்தண்ணன் குளத்தில் போலி ஒத்திகை நடத்தினர்.

இதில், நீர் நிறைந்த இடங்களில் சிக்கியவர்களை காப்பாற்றுவது போன்ற ஒத்திகைகள் பார்க்கப்பட்டது. மேலும், ரப்பர் போட்டில் சென்று காப்பாற்றுவது, தண்ணீரில் நீந்தி சென்று காப்பாற்றுவது போன்ற பல ஒத்திகைகள் இந்த நிகழ்வில் இடம்பெற்று இருந்தன.

அதேபோல, நீரில் மூழ்கியவரை மீட்டு அவருக்கு எப்படி முதலுதவி சிகிச்சை கொடுப்பது, தேங்கிய நீர் களை எப்படி வெளியேற்றுவது போன்ற பல ஒத்திகைகள் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களுக்கு காட்டப்பட்டது.

இந்த ஒத்திகை நிகழ்ச்சியானது கோவை வடக்கு கவுண்டம் பாளையம் நிலைய அலுவலர் செல்வமோகன் தலைமையில் நடைபெற்றது. இதில், கமாண்டோ, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரர்கள் என பலர் கலந்து கொண்டனர்.