தேசதுரோக வழக்கில் வைகோவிற்கு ஓராண்டு சிறை : குறைந்தபட்ச தண்டனை வழங்கியதால் நீதிமன்றத்தில் வைகோ ஆவேசம்

தேசத்துரோக வழக்கில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவை குற்றவாளி என அறிவித்த சிறப்பு நீதிமன்றம், அவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதத் தொகையும் விதித்துள்ளது.


தேசத்துரோக வழக்கில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவை குற்றவாளி என அறிவித்த சிறப்பு நீதிமன்றம், அவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதத் தொகையும் விதித்துள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு நான் குற்றம் சாட்டுகிறேன் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மத்திய அரசுக்கு எதிராகவும், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து வைகோ மீது தேசதுரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் 2017-ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி புழல் சிறைக்கு அனுப்பப்பட்ட வைகோ மே 25ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார். இதனைத் தொடரந்து, இந்த வழக்கு சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் நிலையில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது.

தேசத்துரோக வழக்கில் மதிமுக பொதுச் செயலாளா் வைகோ என்று நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடா்ந்து வைகோவுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதத் தொகையும் விதித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, தேசதுரோக வழக்கில் தண்டனை பெற்றுள்ள வைகோவின் மனுவை ஏற்று சென்னை சிறப்பு நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 

இதனிடையே, நீதிபதிகளிடம் தண்டணையை சீக்கிரம் அறிவிக்கக் கோரி வைகோ கோரிக்கை வைத்ததாக வைகோ தெரிவித்துள்ளார். “தண்டனையைக் குறைக்கச் சொல்லி நான் சொல்லவில்லை. அதிகபட்ச தண்டனை கொடுங்கள். ஆயுள் தண்டனையாக இருந்தாலும் ஏற்றுக் கொள்வேன். தொடர்ந்து விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசிக் கொண்டேதான் இருப்பேன்,” என ஆவேசாமாக பேசினார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...