திருப்பூர் : திருப்பூரில் இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிமாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து ஆரம்பபள்ளி ஆசிரியர்கள் வட்டாரக் கல்வி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் : திருப்பூரில் இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிமாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து ஆரம்பபள்ளி ஆசிரியர்கள் வட்டாரக் கல்வி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிமாறுதல் கலந்தாய்வு நடைபெறவுள்ள நிலையில், திருப்பூர் குமார் நகர் துவக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் லலிதாதேவி மற்றும் மேட்டுப்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி கீதாகுமாரி உள்ளிட்ட 3 ஆசிரியர்களை கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதி அளிக்கவில்லை. இதனை கண்டித்தும், ஆசிரியர்கள் பணிமாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் திருப்பூர் குமரன் சாலையில் உள்ள வடக்கு வட்டார கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிமாறுதல் கலந்தாய்வு நடைபெறவுள்ள நிலையில், திருப்பூர் குமார் நகர் துவக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் லலிதாதேவி மற்றும் மேட்டுப்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி கீதாகுமாரி உள்ளிட்ட 3 ஆசிரியர்களை கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதி அளிக்கவில்லை. இதனை கண்டித்தும், ஆசிரியர்கள் பணிமாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் திருப்பூர் குமரன் சாலையில் உள்ள வடக்கு வட்டார கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.