நீலகிரி : குன்னூர் சிம்ஸ்பூங்கா பழப்பண்ணையில் பேரி ஜாம் தயாரிக்கும் பணியில் தோட்டக்கலை துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நீலகிரி : குன்னூர் சிம்ஸ்பூங்கா பழப்பண்ணையில் பேரி ஜாம் தயாரிக்கும் பணியில் தோட்டக்கலை துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதிகளில் பிளம்ஸ், பேரி, பீச், ஊட்டி ஆப்பிள், துரியன், மங்குஸ்தான் உட்பட பல்வேறு வகை பழங்கள் விளைகின்றன. இதனால், மாவட்ட தோட்டக்கலைத் துறையின் கீழ், குன்னூர் சிம்ஸ்பார்க் அருகே பழவியல் நிலையத்தில், பேரி, ஆப்பிள் உட்பட பல்வேறு பழங்களை கொண்டு ஜாம், ஸ்குவாஸ், ஊறுகாய் உட்பட பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது, குன்னூர் பகுதிகளில் பேரிக்காய் சீசன் களைகட்டியுள்ளதால் பழப் பண்ணையில் விளைந்த பேரி மற்றும் கொடைக்கானல் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட 600 கிலோ பேரியை கொண்டு ஜாம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

இன்னும் ஓரிரு நாட்களில் ஜாம் தயாரிக்கும் பணி முழுமையாக முடித்து, தோட்டக்கலைக்கு சொந்தமான விற்பனை நிலையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜாம் பாட்டில் 300 கிராமுக்கு 90 ரூபாயும், 500 கிராமுக்கு 110 ரூபாயும் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதிகளில் பிளம்ஸ், பேரி, பீச், ஊட்டி ஆப்பிள், துரியன், மங்குஸ்தான் உட்பட பல்வேறு வகை பழங்கள் விளைகின்றன. இதனால், மாவட்ட தோட்டக்கலைத் துறையின் கீழ், குன்னூர் சிம்ஸ்பார்க் அருகே பழவியல் நிலையத்தில், பேரி, ஆப்பிள் உட்பட பல்வேறு பழங்களை கொண்டு ஜாம், ஸ்குவாஸ், ஊறுகாய் உட்பட பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது, குன்னூர் பகுதிகளில் பேரிக்காய் சீசன் களைகட்டியுள்ளதால் பழப் பண்ணையில் விளைந்த பேரி மற்றும் கொடைக்கானல் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட 600 கிலோ பேரியை கொண்டு ஜாம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

இன்னும் ஓரிரு நாட்களில் ஜாம் தயாரிக்கும் பணி முழுமையாக முடித்து, தோட்டக்கலைக்கு சொந்தமான விற்பனை நிலையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜாம் பாட்டில் 300 கிராமுக்கு 90 ரூபாயும், 500 கிராமுக்கு 110 ரூபாயும் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.