பொள்ளாச்சி ராமு ‌கல்லூரியில்‌ வரும் 6-ம் தேதி தனியார்‌ துறை வேலைவாய்ப்பு முகாம்

கோவை : பொள்ளாச்சி ராமு கலை அறிவியல்‌ கல்லுரியில்‌ வரும் 6-ம் தேதி தனியார்‌ துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.


கோவை : பொள்ளாச்சி ராமு கலை அறிவியல்‌ கல்லூரியில்‌ வரும் 6-ம் தேதி தனியார்‌ துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்‌ மூலமாக தனியார்‌ துறையில்‌ வேலை வாய்ப்புக்கு வேலை அளிப்போர்‌, வேலை தேடூவோர்‌ சந்திப்பு நிகழ்ச்சிகள்‌ ஒவ்வொரு வாரமும்‌ வெள்ளிக்கிழமை கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில்‌ நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியின்‌ மூலம்‌ கோவை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள்‌ வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்‌. மேலும்,‌ பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதி மக்கள்‌ மற்றும்‌ மலைவாழ்‌ மக்கள்‌ பயன்பெறும்‌ வண்ணம்‌ வரும்‌ 06-ம் தேதியன்று வால்பாறை மெயின்‌ ரோடு பொள்ளாச்சி ராமு கலை அறிவியல்‌ கல்லூரியில்‌ சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்‌ நடைபெறவுள்ளது. இந்த தனியார்‌ துறை வேலைவாய்ப்பு நேர்காணல்‌ நிகழ்ச்சியில்‌ படிக்காதவர்கள்‌ முதல்‌ 10-ம்‌ வகுப்பு, 12ம்‌ வகுப்பு, அனைத்து பட்டதாரிகள்‌, தொழில்கல்வி பயின்றவர்கள்‌, ஐ.டி.ஐ. படிப்பு பயின்று சான்றிதழ்‌ பெற்றவர்கள்‌ மற்றும்‌ டிப்ளமோ கல்வித்தகுதி உடையவர்கள்‌ மேலும்‌ இதுபோன்ற அனைத்து கல்வித்‌ தகுதி உடைய ஆண்‌/பெண்‌ இருபாலருக்கும்‌ நேர்காணல்‌ நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. 

இந்த நிகழ்ச்சியில்‌, தனியார்‌ துறையில்‌ வேலையளிப்போர்‌ கலந்து கொண்டு தங்கள்‌ நிறுவனத்திற்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய உள்ளார்‌. இத்தனியார்‌ வேலைவாய்ப்பு நிகழ்ச்சியில்‌ கலந்து கொள்ளும்‌ மனுதாரர்கள்‌ வேலையளிப்பலருக்கு எந்தவித கட்டணமும்‌ அளிக்க தேவையில்லை. இந்நிகழ்ச்சி முற்றிலும்‌ இலவசமாக நடத்தப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியில்‌ தேர்வு செய்யப்படும்‌ இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை அப்போதே வழங்கப்படும்‌. இந்நிகழ்ச்சி மூலம்‌ வேலை பெறும்‌ மனுதாரர்களின்‌ வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. இம்மனுதாரர்கள்‌ தொடர்ந்து தங்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை அரசு வேலைவாய்ப்பு கிடைக்கும்‌ வரை தொடர்ந்து புதுப்பித்துக்‌ கொள்ளலாம்‌ என தெரிவிக்கப்படுகிறது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...