கோவை : சாடிவயல் யானைகள் முகாமில் இருந்த சேரன், ஜானுக்கு பதிலாக புதிய கும்கிகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
கோவை : சாடிவயல் யானைகள் முகாமில் இருந்த சேரன், ஜானுக்கு பதிலாக புதிய கும்கிகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட சாடிவயல் கிராமத்தில் யானைகள் முகாம் உள்ளது. இங்கு நீண்ட காலமாக சேரன், ஜான் ஆகிய கும்கி யானைகள் இருந்து வந்தன. இந்த நிலையில், சேரன் முதுமலை புலிகள் வனக்காப்பகத்திற்கும், சேரன் தெப்பக்காடு புலிகள் வனக் காப்பகத்திற்கும் நேற்று நள்ளிரவில் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த இரு யானைகளும் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி சுஜய், பாரி ஆகிய கும்கிகள் ஆனைமலை மற்றும் முதுமலை ஆகிய புலிகள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதால், கோவைக்கு அழைத்து வரப்பட்டது.

சேரன், ஜான் ஆகிய கும்கி யானைகள், சின்னத்தம்பி மற்றும் விநாயகன் காட்டு யானைகளை இடம் மாற்றும் செய்யும் முக்கிய ஆபரேசனில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த மார்ச் மாதம் காட்டு யானை தாக்கியதில் ஏற்பட்ட காயம் மற்றும் கண்புரை உள்ளிட்ட பல்வேறு உடல் பிரச்சனைகளை மேம்படுத்துவதற்காக 32 வயது சேரன் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சேரன் மற்றும் ஜானுக்குப் பதிலாக சுயம்பு மற்றும் வெங்கடேஷ் ஆகிய கும்கிகள் கோழிக்கமுதி யானைகள் முகாமிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளன. கோவையில் மனித - விலங்குகள் மோதலை தடுப்பதற்காக சாடிவயல் பகுதியில் யானைகள் முகாம் கடந்த 2012-ம் ஆண்டு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.