திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி 49-வது வார்டுக்குட்பட்ட தெற்கு தோட்டம் பகுதியில் முறையாக குடிநீர் விநியோகம் செய்வதில்லை எனக் கூறி திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் காலி குடங்களுடன் முற்றுகையிட்டனர்.
திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி 49-வது வார்டுக்குட்பட்ட தெற்கு தோட்டம் பகுதியில் முறையாக குடிநீர் விநியோகம் செய்வதில்லை எனக் கூறி திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் காலி குடங்களுடன் முற்றுகையிட்டனர்.
திருப்பூர் மாநகராட்சி 49-வது வார்டு தெற்கு தோட்டம் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குடிநீர் குழாயில் ஏற்பட்ட அடைப்பால் பல இடங்களில் முறையாக தண்ணீர் கிடைக்கவில்லை. இது தொடர்பாக பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இதனைக் கண்டித்து குடிநீர் குழாய் அடைப்பினை உடனடியாக சரி செய்ய வலியுறுத்தியும், அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.
திருப்பூர் மாநகராட்சி 49-வது வார்டு தெற்கு தோட்டம் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குடிநீர் குழாயில் ஏற்பட்ட அடைப்பால் பல இடங்களில் முறையாக தண்ணீர் கிடைக்கவில்லை. இது தொடர்பாக பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இதனைக் கண்டித்து குடிநீர் குழாய் அடைப்பினை உடனடியாக சரி செய்ய வலியுறுத்தியும், அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.