கோவை : அண்மையில் கூண்டில் இருந்து வெளியே விடப்பட்ட காட்டு யானை சின்னத்தம்பியை மீண்டும் மரக்கூண்டில் அடைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோவை : அண்மையில் கூண்டில் இருந்து வெளியே விடப்பட்ட காட்டு யானை சின்னத்தம்பியை மீண்டும் மரக்கூண்டில் அடைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோவை தடாகம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள விளைநிலங்களில் அட்டகாசம் செய்து வந்த சின்னத்தம்பி, கடந்த ஜனவரி 25-ம் தேதி சிறைபிடிக்கப்பட்டு, ரேடியோ காலர் பொருத்தப்பட்டு வரகலியாறு வனப் பகுதியில் விடப்பட்டது. ஆனால், அங்கிருந்து இடம்பெயர்ந்த யானை மீண்டும் கிராமங்களுக்குள் புகுந்தது. இதனை கண்காணித்து வந்த வனத்துறையினர், மீண்டும் மயக்க ஊசி செலுத்தி சின்னத்தம்பி யானையை பிடித்தனர். தொடர்ந்து, டாப்சிலிப் யானைகள் முகாமில் கும்கி யானையாக மாற்றுவதற்கான பயிற்சிகள் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, கடந்து பிப்ரவரி 16-ம் தேதி டாப்சிலிப் முகாமில் உள்ள மரக்கூண்டுக்குள் அடைக்கப்பட்டது. தொடர்ந்து, 132 நாட்கள் பயிற்சி முடிந்த நிலையில், முகாம் யானைகளுடன் சேர்ப்பதற்காக மரக் கூண்டிலிருந்து சின்னத்தம்பி வெளியேற்றப்பட்டான். இருப்பினும், அவனது கால்களில் சங்கிலி பிணைக்கப்பட்டு இருந்தது.
பயிற்சி முடிவடைந்து சின்னத்தம்பி இனி கும்கி யானைகளுடன் பழக விடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சின்னத்தம்பி யானை மீண்டும் கூண்டில் அடைக்கப்பட்டது. இதனிடையே, சின்னத்தம்பி யானைக்கு இன்னும் பயிற்சி முடியவில்லை என்றும், நீண்ட நாட்கள் பயிற்சி அளிக்கப்பட வேண்டி இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோவை தடாகம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள விளைநிலங்களில் அட்டகாசம் செய்து வந்த சின்னத்தம்பி, கடந்த ஜனவரி 25-ம் தேதி சிறைபிடிக்கப்பட்டு, ரேடியோ காலர் பொருத்தப்பட்டு வரகலியாறு வனப் பகுதியில் விடப்பட்டது. ஆனால், அங்கிருந்து இடம்பெயர்ந்த யானை மீண்டும் கிராமங்களுக்குள் புகுந்தது. இதனை கண்காணித்து வந்த வனத்துறையினர், மீண்டும் மயக்க ஊசி செலுத்தி சின்னத்தம்பி யானையை பிடித்தனர். தொடர்ந்து, டாப்சிலிப் யானைகள் முகாமில் கும்கி யானையாக மாற்றுவதற்கான பயிற்சிகள் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, கடந்து பிப்ரவரி 16-ம் தேதி டாப்சிலிப் முகாமில் உள்ள மரக்கூண்டுக்குள் அடைக்கப்பட்டது. தொடர்ந்து, 132 நாட்கள் பயிற்சி முடிந்த நிலையில், முகாம் யானைகளுடன் சேர்ப்பதற்காக மரக் கூண்டிலிருந்து சின்னத்தம்பி வெளியேற்றப்பட்டான். இருப்பினும், அவனது கால்களில் சங்கிலி பிணைக்கப்பட்டு இருந்தது.
பயிற்சி முடிவடைந்து சின்னத்தம்பி இனி கும்கி யானைகளுடன் பழக விடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சின்னத்தம்பி யானை மீண்டும் கூண்டில் அடைக்கப்பட்டது. இதனிடையே, சின்னத்தம்பி யானைக்கு இன்னும் பயிற்சி முடியவில்லை என்றும், நீண்ட நாட்கள் பயிற்சி அளிக்கப்பட வேண்டி இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.