கோவை : உக்கடம் அருகே உள்ள மஜித் காலனி பகுதி ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் இன்று அகற்றப்பட்ட போது, குடியிருப்புவாசிகள் கண்ணீர் விட்டு கதறினர்.
கோவை : உக்கடம் அருகே உள்ள மஜித் காலனி பகுதி ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் இன்று அகற்றப்பட்ட போது, குடியிருப்புவாசிகள் கண்ணீர் விட்டு கதறினர்.

உக்கடம் மஜித் காலனி பகுதியில் ஆக்கிரமிப்பு இடத்தில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இன்று மாநகராட்சி நிர்வாகத்தால் பொக்லைன் இயந்திரங்கள் மூலமாக இடிக்கப்பட்டது.

இப்பகுதியில் உள்ளவர்களுக்கு ஏற்கனவே மாற்று குடியிருப்பு வழங்கப்பட்ட நிலையில், தற்போது குடியிருப்புகளை காலி செய்யாததால் மாநகராட்சி சார்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

30 ஆண்டுகளாக இருந்த குடியிருப்புகள் அகற்றப்பட்டதால் பெண்கள், ஆண்கள் அனைவரும் கதறி அழுத காட்சிகள் அனைவரின் மனதையும் உருக்குலையச் செய்தது.