திருப்பூர் : சாலை மற்றும் சாக்கடை வசதிகளை நிறைவேற்றித் தராத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கொசு வலை போர்த்தியும், தலையில் கட்டு போட்டும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் : சாலை மற்றும் சாக்கடை வசதிகளை நிறைவேற்றித் தராத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கொசு வலை போர்த்தியும், தலையில் கட்டு போட்டும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வீரபாண்டி ஜே.ஜே. நகர் ஆகிய பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதிகளில் தார் சாலைகள் மோசமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுவதாகவும், இது குறித்து பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டினர். மேலும், வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி அவர்களுக்கு காயங்கள் ஏற்படுவதாகவும், அதேபோல் சாக்கடை பல மாதங்களாக தூர்வாராததால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.
இதனை சரி செய்யாத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கொசுவலைகளை தங்கள் மீது போர்த்தியும், தலை மற்றும் கைகளில் காயம் பட்டது போல் கட்டு கட்டிக் கொண்டும் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வீரபாண்டி ஜே.ஜே. நகர் ஆகிய பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதிகளில் தார் சாலைகள் மோசமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுவதாகவும், இது குறித்து பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டினர். மேலும், வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி அவர்களுக்கு காயங்கள் ஏற்படுவதாகவும், அதேபோல் சாக்கடை பல மாதங்களாக தூர்வாராததால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.
இதனை சரி செய்யாத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கொசுவலைகளை தங்கள் மீது போர்த்தியும், தலை மற்றும் கைகளில் காயம் பட்டது போல் கட்டு கட்டிக் கொண்டும் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.