மக்கள் விருப்பத்திற்கு மாறாக ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படமாட்டது : வானதி சீனிவாசன் உறுதி

கோவை : மக்கள் விருப்பத்திற்கு மாறாக ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தாது என பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

கோவை : மக்கள் விருப்பத்திற்கு மாறாக ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தாது என பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது :- வருகின்ற 6-ம் தேதி முதல் பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கை துவங்குகிறது. நேரடியாகவும், மிஸ்ட் கால் மூலமாகவும் பா.ஜ.க. உறுப்பினர்கள் சேர்க்கப்படுவார்கள். 8980808080 என்ற எண்ணை அழைத்து பா.ஜ.க.வில் இணையலாம். தமிழ்நாட்டில் கடந்த முறை நடந்த உறுப்பினர் சேர்க்கையில் 40 இலட்சம் பேர் மிஸ்ட்கால் மூலம் பா.ஜ.க.வில் இணைந்தனர். இந்த முறை அதைவிட அதிகம் பேர் இணைவார்கள். 

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் செயல்படுத்த முடியாது. மக்கள் விருப்பத்திற்கு மாறாக ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தாது. மக்களை ஏமாற்றுவதற்காகவே காலி குடங்களை வைத்து கொண்டு ஸ்டாலின் தண்ணீர் பிரச்சனை குறித்து போராட்டம் நடத்துகிறார். எத்தனை நீர்நிலைகள் தி.மு.க. ஆட்சியில் தூர்வாரப்பட்டன என்பதை ஸ்டாலின் அறிக்கை அளிக்க வேண்டும். மேலும், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிக்கை அரசியல் செய்யாமல், ஆக்கப்பூர்வமான அரசியல் செய்ய வேண்டும். மற்ற பிரச்சணைகளை போலவே நீர் பிரச்சனையிலும் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது. ஊடக விவாதங்களில் பா.ஜ.க.வினர் கலந்து கொள்வதில்லை என்பது கட்சி எடுத்த தற்காலிக முடிவு. காங்கிரஸ் கட்சி தேசிய கட்சியல்ல. ஒரு குடும்பக் கட்சி. பா.ஜ.க. குடும்ப கட்சியல்ல, என தெரிவித்தார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...