கோவையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை கண்காணிக்க வார்டு வாரியாக 3 பேர் கொண்ட குழு நியமனம் - மாநகராட்சி அதிரடி

கோவை : கோவை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை கண்காணிக்க வார்டு வாரியாக 3 பேர் கொண்ட் குழு நியமிக்கப்பட உள்ளதாக மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தெரிவித்துள்ளார்.


கோவை : கோவை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை கண்காணிக்க வார்டு வாரியாக 3 பேர் கொண்ட் குழு நியமிக்கப்பட உள்ளதாக மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சியில் இன்று மக்கள் குறை தீர்ப்பு முகாம் இன்று நடைபெற்றது. அதில், கலந்து கொண்ட மாநகராட்சி ஆணையர் பேசியதாவது :- கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்துவதில் நிர்வாகம் தீவிரமாக உள்ளது. 3 பேர் கொண்ட குழுவினர் அனைத்து வார்டுகளிலும் குடியிருப்புகளிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்கப்பட்டுள்ளதா எனக் கண்காணிக்கும். அவ்வாறு கட்டமைக்காத குடியிருப்புகளுக்கு வரும் ஆக்ஸ்ட் 15-ம் தேதி வரை மாநகராட்சி நிர்வாகம் அவகாசம் அளிக்கும். அந்த அவகாசத்திற்குள்ளும் கட்டமைக்கவில்லையெனில், சம்பந்தப்பட்ட குடியிருப்பின் உரிமையாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

தொடர்ந்து, சூயஸ் தொடர்பான கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், “சூயஸ் நிறுவனத்தின் குடிநீர் திட்டப்பணிகள் ஆர்.எஸ். புரம் பகுதியில் முழுவீச்சில் நடந்து வருகிறது. மக்கள்களுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படாத வண்ணம், பல்வேறு சிக்கல்களுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குடிநீர் முன்பு செலுத்தியிருந்த தொகையே கட்டணமாகும். இதனை கோவை மாநகராட்சி வசூலிக்கும்,” என்றார்.

இதனிடையே, கோவை மாநகராட்சியில் நடந்த இன்றைய மக்கள் குறை தீர்ப்பு முகாமில் 61 மனுக்கள் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...