நீலகிரி : குன்னூர் அருகே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் வெடிமருந்து நிரப்பும் போது ஏற்பட்ட வெடி விபத்தில் படுகாயமடைந்தவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நீலகிரி : குன்னூர் அருகே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் வெடிமருந்து நிரப்பும் போது ஏற்பட்ட வெடி விபத்தில் படுகாயமடைந்தவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் 1,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். இங்குள்ள உற்பத்தி செய்யப்படும் வெடிமருந்துகள் நாட்டின் பாதுகாப்பிற்காக பல இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மிகவும் பாதுகாக்கப்பட்ட இந்த தொழிற்சாலையில் 29-ம் தேதி அதிகாலை பி.எம்.சி. செக்சனில் பயோ மாடல் சார்ஜ் மருந்தினை நிரப்பிக் கொண்டிருந்த போது திடீர் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சூரஜ் குமார் 80 சதவீத தீக்காயத்துடனும், ராபின் சற்குணமுரளி ஆகியோர் பலத்த காயங்களுடன் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சூரஜ்குமார் இன்று உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொழிலாளர்கள் மத்தியில் அனுதாபவத்தை ஏற்படுத்தியுள்ளது.